மருந்து வகைகள் தொடர்பான சட்ட மூலத்தை சுருட்டிக் கொண்ட மைத்திரி எப்படி மக்களை காப்பாற்றுவார்- வசந்த

தி­கா­ரி­களின் அச்­சு­றுத்­த­லுக்கு அடி பணிந்து மருந்து வகைகள் தொடர்பான சட்ட மூலத்தை சுருட்டிக் கொண்ட முன்னாள் சுகா­தார அமைச்சர் மைத்­தி­ரி­பால சிறி­சேன எவ்­வாறு நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் தலை­மைத்­துவம் வழங்­கப்­போ­கின்றார்? எனக் கேள்வி எழுப்பும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார, குளிர் நீரையும் சூடாக்கி பரு­கு­பவர்தான் மைத்­தி­ரி­பால சிறி­சேன என்றும் அவர் தெரி­வித்தார்.

கொழும்பில் இடம்­பெற்ற தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் ஊட­க­வி­ய­லாளர் மா­நாட்டில் உரை­யாற்றும் போதே டாக்டர் வசந்த பண்­டார இவ்­வாறு தெரி­வித்தார். இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தனது அமைச்சுப் பத­வி­யையும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் பத­வி­யையும் தக்கவைத்­துக்­கொண்டு எத­னையும் கண்டுகொள்­ளாத மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டின் தீர்க்­க­மான முக்­கி­ய­மான கால கட்­டங்­களில் பாரா­ளு­மன்­றத்தில் எந்­த­வி­த­மான வர­லாற்று திருப்புமுனை­யான உரை­க­ளையும் நிகழ்த்­தா­தவர். பாரா­ளு­மன்ற ஹன்சார்ட் அறிக்­கை­களில் அவ்­வா­றான உரை­களை காண­வில்லை.

அத்­தோடு மருந்து வகைகள் தொடர்­பான சட்­ட­மூ­லத்தை கொண்டுவரும் போது அது தடுக்­கப்­பட்­டது என இன்று கூறு­கின்றார்.ஆனால் அவ்­வாறு தடுக்கும் முயற்­சி­க­ளுக்கு எதி­ராக சுகா­தார அமைச்­ச­ராக அமைச்­சுக்­குள்ளோ வெளி­யிலோ அல்­லது பாரா­ளு­மன்­றத்­திலோ இவர் வாதா­டவும் இல்லை, போரா­டவும் இல்லை.

இறு­தியில் கம்­ப­னி­களின் தேவைக்­காக அதி­கா­ரிகள் தயா­ரித்த மருந்­துகள் தொடர்­பான சட்டமூல நகலை ஏற்­றுக்­கொண்டு அச் சட்டமூலத்தை நிறை­வேற்­று­வ­தையும் சுருட்­டிக்­கொண்டார். அதி­கா­ரி­களின் அச்­சு­றுத்­த­லுக்கு பயந்து சட்டமூலத்தை சுருட்டிக்கொண்­ட­வரால் எப்­படி நாட்­டுக்கு தலை­மைத்­து­வத்தை வழங்க முடியும்? குளிர் நீரையும் சூடாக்கி பருகும் இவரால் நாட்டுக்குதலைமைத்துவத்தை வழங்க முடியுமா என் றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :