முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரியை ஆதரிக்கும் -ஹஸன் அலி

னா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் கடந்த சனிக்­கி­ழமை மாலை அலரி மாளி­கையில் ஜனா­தி­ப­திக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்ற போதும் முஸ்லிம் காங்­கிரஸ் ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது வேட்­பா­ள­ரான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையே ஆத­ரிக்கும் எனத் தெரிய வரு­கி­றது.

குறிப்­பிட்ட சந்­திப்பின் போது கடந்த காலங்­களில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கைகள் அவை தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்­தாமை என்­பன பற்றி ஜனா­தி­ப­தி­யிடம் விளக்­கப்­பட்­டது. பொது பல­சே­னாவின் நட­வ­டிக்­கைகள் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை எனவும் சுட்டிக் காட்­டப்­பட்­டன.

வடக்கு கிழக்கில் முஸ்­லிம்­களின் காணிகள் அப­க­ரிப்பு உட்­பட பிரச்­சி­னைகள் பற்றி விளக்­கப்­பட்­டன. அரசு வழங்­கிய உறு­தி­மொ­ழிகள் நிறை­வேற்­றப்­ப­டாமை என்­பன தொடர்பில் கவலை வெளி­யி­டப்­பட்­டது. அரசு வழங்­கிய உறு­தி­மொ­ழிகள் வழங்­கப்­ப­டா­மை­யினால் சமூகம் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­தா­கவும் ஜனா­தி­ப­தி­யிடம் எடுத்து விளக்­கப்­பட்­டது.

6 முஸ்லிம் காங்­கி­ரஸின் முறைப்­பா­டு­களை செவி­ம­டுத்த ஜனா­தி­பதி இவை தொடர்பில் உறு­தி­யான நிலைப்­பாட்­டினை தெரி­விக்­கா­மை­யினால் முஸ்லிம் காங்­கிரஸ் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­தாக அறி­யக்­கி­டைக்­கி­றது.

முஸ்லிம் காங்­கி­ரஸின் முறைப்­பா­டு­களை செவி­மெ­டுத்த ஜனா­தி­பதி முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்­க­ளுடன் கலந்து பேசி தீர்­வுகள் பெற்­றுக்­கொள்­ளலாம் எனத் தெரி­வித்­துள்ளார். சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்­புக்­களை பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஏற்­பாடு செய்­ய­வுள்ளார்.

முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சியல் உயர்­பீட உறுப்­பி­னர்கள் கடந்த காலங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்ற சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து ஜனா­தி­ப­தியின் மீது நம்­பிக்­கை­யி­ழந்­துள்­ளார்கள். கட்­சியின் ஒரு அமைச்­சரைத் தவிர ஏனையோர் பொது அபேட்­சகர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையே ஆத­ரிக்க வேண்டும் என உறு­தி­யாக இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்தத் தீர்­மானம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அர­சியல் உயர்­பீடம் கூடி வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலியை கேசரி தொடர்பு கொண்டு கட்­சியின் நிலைப்­பாடு தொடர்பில் வின­வி­ய­போது அர­சு­ட­னான முஸ்லிம் காங்­கி­ரஸின் உறவு தொடர்ந்து அருகி வருகிறது.

அரசு உறுதி மொழிகள் வழங்கினாலும் அவை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இல்லை. அரசுடன் இணைந்து போகும் சாத்தியக் கூறுகள் குறைவு. இது எனது சொந்தக் கருத்தாகும். கட்சியின் தீர்மானத்தை நாம் நாகரீகமாக வெளியிட வேண்டும் பொறுமை காக்க வேண்டும் என்றார்.
<வீரகேசரி>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :