ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடுதழுவிய ரீதியில் கண்காணிப்பு!

டக்கு, கிழக்கு உட்­பட நாடு முழு­வதும் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பான கண்கா­ணிப்­புக்­களை மேற்­கொள்­வ­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டுள்­ள­தாக 'கபே' தேர்தல் கண்­கா­ணிப்பு அமைப்பின் தலைவர் கீர்த்தி தென்­னக்கோன் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­ட­தி­

லி­ருந்து இன்­று­வரை 27 சம்­ப­வங்கள் தொடர்­பாக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்இது தொடர்­பாக கபே அமைப்பின் தலை

வர் கீர்த்தி தென்­னக்கோன் மேலும் தெரி­விக்­கையில், நேற்று புதன்கிழமை அதி­காலை திவு­லப்­பிட்­டி­யவில் எதிர்த்­த­ரப்பு கட்­அவுட் ஒன்றை வைப்­ப­தற்கு முயற்­சிக்கையில் அப்­பி­ர­தே­சத்தின் சில ஆளும் கட்சி உறுப்­பி­னர்­களால் எதிர்த்­த­ரப்­பினர் தாக்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்­தோடு இது­வ­ரையில் நாடுமுழு­வதும் இருந்து 27 சம்­ப­வங்கள் தொடர்­பாக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன.இவற்றில் 9 சம்­ப­வங்கள் மட்டும் கடு­மை­யான வன்­முறைச் சம்­ப­வங்­க­ளாகும்.புத்­தளம், களுத்­துறை, கண்டி பிர­தே­சங்­க­ளி­லேயே அதி­க­ளவில் வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்­பாக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன.ஜனா­தி­ப­தித்­தேர்தல் நெருங்­கு­கையில் வன்­

மு­றைகள் மேலும் அதி­க­ரிக்­கலாம். இது தொடர்­பாக நாம் அவ­தா­ன­மாக இருக்­கின்றோம். எமது அமைப்பு வடக்கு கிழக்கு உட்­பட நாடுபூரா­கவும் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

அதற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் மேற்­கொண்­டுள்ளோம்.

மக்களது வாக்குரிமையை பாதுகாத்து நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றும் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :