8 ஆம் திக­திக்கு பின்­னரும் நானே இந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக இருப்பேன்-ஜனாதிபதி மஹிந்த

திர்­வரும் ஜன­வரி மாதம் 8 ஆம் திக­திக்கு பின்­னரும் நானே இந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக இருப்பேன். இது தொடர்பில் மக்கள் அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை. எனது கடப்­பா­டு­களை நிறை­வேற்­று­வ­தற்கு எவ­ரு­டனும் உடன்­ப­டிக்கை செய்து கொள்ள வேண்­டிய அவ­சியம் இல்லை. மக்கள் என்­னோடு உள்­ளனர் என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.

எவர் எவ­ரோடு உடன்­ப­டிக்கை செய்து கொண்­டாலும் சகோ­தர அர­சியல் கட்­சி­க­ளுடன் கைகோர்த்து நாட்டை அபி­வி­ருத்தி செய்ய தயா­ரா­கவே உள்ளேன் என்றும் ஜனா­தி­பதி கூறினார்.

எம்­பி­லிப்­பிட்டி நகரில் நவீன வச­தி­க­ளுடன் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள புதிய சந்தை கட்­டி­டத்­தொ­கு­தியை நேற்று புதன்­கி­ழமை திறந்து வைத்து மக்­க­ளுக்கு கைய­ளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இவ்­வாறு தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

எதிர்­வரும் ஜன­வரி மாதம் 8 ஆம் திக­திக்கு பின்­னரும் இந்­நாட்டின் ஜனா­தி­பதி நானே. எனவே இது தொடர்பில் மக்கள் எது­வி­த­மான அச்­சமும் கொள்ளத் தேவை­யில்லை.

எவ­ரு­டனும் உடன்­ப­டிக்­கை­களை கைச்­சாத்­திட வேண்­டிய அவ­சியம் எனக்­கில்லை. ஒவ்­வொ­ரு­வ­ருக்கு தேவை­யான விதத்தில் உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­ப­டு­கின்­றன. இவை மரக்­கொ­டிகள் போல் வியா­பிக்கும். ஆனால் எம்­மோடு இணைந்­துள்ள சகோ­தர அர­சியல் கட்­சிகள் தமது கருத்­துக்­களை அச்­ச­மின்றி எம்­மிடம் கூற முடியும்.

அதற்­க­மைய மக்­களின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தோடு அர­சியல் கட்­சி­க­ளு­டனும் மக்­க­ளு­டனும் கைகோர்த்து அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுப்பேன். இன்று சிலர் தமது இய­லா­மையை கூறாது தமக்கு வாய்ப்­ப­ளிக்­கப்­ப­ட­வில்லை என்­கின்­றனர்.ஒரு சிலர் சட்ட மூலங்கள் திருட்டுப் போனது என்­கி­றார்கள். அதன் நகல்­களை காண­வில்லை என்­கின்­றனர்.

நாங்­களும் அமைச்சுப் பத­வி­களை வகித்­துள்ளோம். சட்ட மூலங்­களின் நகல்கள், செய­லா­ளர்­க­ளி­டமும் விட­யத்­திற்கு பொறுப்­பான அதி­கா­ரி­க­ளி­டமும் பிரத்­தி­யேக செய­லா­ளர்கள் மற்றும் சட்ட அதி­கா­ரி­க­ளி­டமும் இருக்கும்.

அப்­ப­டி­யானால் இவை உள்­ளுக்­குள்­ளேயே திருட்டுப் போயுள்­ளது.

ஒரு பொறுப்பை ஏற்­றுக்­கொண்டால் அதனை நிறை­வேற்­றாது எம் மீது குற்றம் சுமத்­து­வது பிழை­யான செய­லாகும். இந் நாட்டின் அனைத்து துறை­களின் அபி­வி­ருத்­திக்கும் உத­வி­களை வழங்­கி­யுள்ளோம். அனைத்து அமைச்­சுக்­க­ளுக்கும் கோடிக்­க­ணக்­கான பணத்தை ஒதுக்கிக் கொடுத்­துள்ளோம்.

வரவு செலவு திட்­டத்தின் ஊடாக முதல் முத­லாக 136 மில்­லியன் ரூபாவை பாட­சாலை அபி­வி­ருத்­தி­களின் கீழ் பொலன்னறுவை றோயல் கல்லூரிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எம்பிலிப்பிட்டிய நவீன சந்தை ரூபா 150 மில்லியன் செலவில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :