காத்தான்குடி-அல்-பலாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் 4 வது பாலர் கலை விழா-படங்கள்

 பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்குடி இஸ்றா சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்டுவரும் காத்தான்குடி அல்-பலாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் 4 வது பாலர் கலை விழா 30-11-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இஸ்றா சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.எம்.ஆரிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து கொண்டோர்.

இதன் போது பாலர் கலை விழாவில் சிறப்பான முறையில் நிகழ்ச்சிகளை செய்த பாலர்களும் அவர்களை சிறப்பாக பயிற்றுவித்த ஆசிரியர்களும் அதிதிகளினால் பரிசும் , சான்றிதழும்,விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் இஸ்றா சனசமூக நிலையத்தில் இணைந்து இரண்டு வருடங்களாக சமூகப் பணிகளை மேற்கொண்டுவரும் இளைஞர்,யுவதிகள் சுமார் 35 பேர் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு அல்-பலாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலை பாலர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை,கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர் ,காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான எம்.எச்.எம்.சியாட்,சல்மா அமீர் ஹம்ஸா,பொதுச் சேவைகள் ஒய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சித்தீக்,3 பீ ஸ்ரீலங்கா அமைப்பின் நிருவாகக் குழு பொருளாளர் ஏ.என்.எம்.நஸீத் ,பாலர்களின் தோழன் எம்.எச்.எம்.முழாபிர் உட்பட ஊர் பிரமுகர்கள் ,இஸ்றா சனசமூக நிலைய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :