SLMC,TNAயுடனான நிபந்தனைகள் தொடர்பில் எதிரணியினர் செய்த உடன்படிக்கை என்ன?BBS கேள்வி

மிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் நடத்­தப்பட்ட பேச்­சு­வார்த்­தை­களின் விப­ரங்­களையும் செய்துகொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கைகள் மற்றும் நிபந்­த­னைகள் என்­ன­வென்­பதை யும்அரசு தரப்­பி­னரும் எதிர்க்­கட்­சி­யி­னரும் நாட்­டுக்கு பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும் எனசவால் விடுக்கும் பொது­ப­ல­சேனா ­ஜ­னா­தி ­ப­தியை

தீர்­மா­னிப்­பது சிறு­பான்­மை­யினர் அல்ல சிங்­கள பௌத்த சக்­தி­களே என்று அவ்­வ­மைப்பு தெரி­வித்­தது.

கொழும்பில் கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பொது­ப­ல­சேனா அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

இங்கு உரை­யாற்­றிய பொது­ப­ல­சே­னாவின் பொது செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர்;

ஜனா­தி­பதித் தேர்­தலில் எப்­ப­டி­யா­வது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அரச தரப்பை சார்ந்த சிலரும் எதிர்க்­கட்­சியை சார்ந்­த­வர்­களும் நாட்டில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சர்­வ­தேச சதி­கா­ரர்­க­ளுக்கு துணை போகும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ரு­டனும் முஸ்லிம் காங்­கி­ர­ஸு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்­ளனர். சில நிபந்­த­னை­க­ளையும் ஏற்­றுக்­கொண்டு உடன்­ப­டிக்­கை­க­ளையும் செய்து கொண்­டுள்­ளனர்.

எனவே நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தைகள் என்ன நிபந்­த­னைகள் என்ன? செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கைகள் என்­ன­வென்­பது தொடர்பில் நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும்.

இந்­நாட்டின் தலை­வர்கள் யாரென்­பதை சிறு­பான்­மை­யின அர­சியல் கட்­சிகள் தீர்­மா­னிக்கும் காலம் மலை­யேறி விட்­டது. இனி ஒரு­போதும் அதற்கு இட­ம­ளிக்­க­மாட்டோம். இந்­நாட்டின் தலை­வரை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக பொது­ப­ல­சேனா உரு­வாகி விட்­டது. சிங்­கள பெளத்­தர்­களே இந்­நாட்டை ஆழ வேண்டும்.

அதனை நாமே தீர்­மா­னிப்போம். எனவே அரச தரப்­பி­னரும் எதிர்க்­கட்­சி­யி­னரும் நாட்டை காட்­டிக்­கொ­டுக்கும் சிங்­கள பௌத்­தர்­களை காட்­டிக்­கொ­டுக்கும் வர­லாற்றுத் தவறை செய்­வ­தற்கு முன்­வ­ரக்­கூ­டாது.

இங்கு பொது வேட்­பாளர் என்ற பேச்­சுக்கே இட­மில்லை. தேசிய தலை­மைத்­து­வமே எமது இலக்­காகும்.

சிங்­கள பௌத்­தர்­களை யார் பாது­காக்­கின்­றார்­களோ அவர்­க­ளுக்கே எமது ஆத­ரவு. அவ்­வாறு இல்­லா­விட்டால் எமது கையில் தேசிய வேட்­பாளர் இருக்­கிறார். தக்க தரு­ணத்தில் கள­மி­றக்­குவோம்.

அதற்­காக விசே­ட­மாக அர­சியல் குழு­வொன்றை நிய­மித்­துள்ளோம். எதிர்க்­கட்­சி­யான ஐ.தே.கட்­சிக்கு இன்று தலை­மைத்­துவம் இல்­லாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. எனவே தான் பொது வேட்­பா­ளரை தேடி ஓடு­கி­றது.

இவ்­வாறு எதிர்க்­கட்­சியின் நிலை தொடர்ந்தால் விலாசம் இல்­லாமல் போய்­விடும்.

தேசிய பிரச்­சினை

சிங்­கள பௌத்­தர்­களின் உரி­மைகள் பாது­காப்பு பறி­போ­வதை எதிர்த்து கடந்த காலங்­களில் நாம் போரா­டினோம். ஹலால் பிரச்­சினை வில்­பத்­துவில் காடுகள் அழிப்பு காணிகள் பறி­முதல் ஷரிஆ வங்­கிகள் என பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு எதி­ராக குரல்­கொ­டுத்தோம்.

ஆனால், இவை தொடர்பில் ஆளும் தரப்­பி­னரோ, எதிர்த்­த­ரப்­பி­னரோ எவரும் குரல் கொடுக்­க­வில்லை மௌனம் சாதித்­தனர்.

இன்று ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட உள்ள நிலையில் நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்க வேண்டும். ஊழல் மோச­டி­களை ஒழிக்க வேண்டும். குடும்ப அர­சி­ய­லையே ஒழிக்க வேண்டும் என தேசிய பிரச்­சி­னை­களை உத­றித்­தள்ளி விட்டு அவற்­றிற்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­காமல் வழ­மை­யான அர­சியல் விட­யங்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கின்­றனர்.

யுத்த காலத்தில் பிர­பா­க­ரனைப் பார்த்­துக்­கொண்டு தேசிய பிரச்­சி­னை­களை மறந்தோம். ஆனால், இன்று பிர­பா­கரன் இல்லை. எனவே, தேசிய பிரச்சினைகளுக்கு முதலிடம் கொடுப்போம்.

சிங்கள பௌத்த ராஜ்யத்தை இங்கு உருவாக்குவோம் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். விதாரன்தெனியே நந்ததேரர் தேசிய அமைப்பாளர் எதிர்க்கட்சிகள் இன்று தமது பொது வேட்பாளரத் யாரென்பதை தீர்மானிக்க முடியாது திண்டாடுகின்றனர். எனவே இவர்கள் எப்படி நாட்டை ஆளப்போகின்றார்கள் சிங்கள பௌத்தர்களை பாதுகாக்க போகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :