வெள்ளப் பெருக்கின் காரணமாக நிந்தவூர் பிரதேச வயற் காணிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் பயிரழிவைக் கட்டுப்படுத்தும் வகையில் நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் வை.எல். சுலைமாலெவ்வை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம அவர்களுடன் நடத்திய விஷேட சந்திப்பையடுத்து இந்த வயல் நிலங்களை பாதுகாக்கும் வகையில் பாரிய அணைக்கட்டு அமைக்க ஆளுநர் அனுமதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை மாட்டுப்பளை, வடகண்ட மற்றும் தென்கண்ட பகுதியிலுள்ள விவசாயக் காணிகளில் ஏற்படும் தொடர்ச்சியான அழிவுகளை ஆளுநரிடம் சுட்டிக் காட்டிய போது மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வையுடன் தொடர்பு கொண்ட ஆளுநர், அதற்கான திட்டங்களை தயாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.
மேலும் இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பாரிய பிரச்சினையால் விவசாயிகள் பெருமளவில் பாதிப்படைவதாகவும், நெல் உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் சுலைமாலெவ்வை சுட்டிக் காட்டினார்.
.jpg)
0 comments :
Post a Comment