'பசுமை நிறைந்த நாடு ஒளிமயமான எதிர்காலம்' தேசிய மர நடுகைத் திட்டத்தின் மூலம் இலங்கையின் வன வளத்தை அதிகரிக்கும் இலக்கை வெற்றிகொள்வோம் எனும் எனும் தொனிப்பொருளில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு 15-11-2014 இன்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறும் 'தயட்ட செவண' தேசிய மரநடுகை விழாவின் மட்;டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
வன பரிபாலன திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தின் அதிகாரி டி.பி.பிரசாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
இதன் போது சுப நேரம் காலை 10.41 மணிக்கு 'தயட்ட செவண' தேசிய மரம் மரநடுகை திட்டத்திற்கான முதலாவது மரத்தை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எல்.கே.ஜி.இஹலவல ,காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் அதிபர் யூ.எல்.முபாறக்,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர ,வன பரிபாலன திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலய உதவி அதிகாரி எம்.ஏ.நபீஸ் உட்பட ஆசிரியர்கள்,மாணவர்கள்,அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை 'தயட்ட செவண' தேசிய மரநடுகை விழா மட்டக்களப்பு மாவட்டத்திலும் 14பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இடம்பெற்றதோடு இதற்காக சுமார் 12000யிரம் மரங்கள் வன பரிபாலன திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment