அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக சம்மாந்துறை அமீர் நியமனம்!

அபூ இன்ஷாப்-

ம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக சம்மாந்துறையை சேர்ந்த அஷ்ஷேய்க் எம்.ஐ.அமீர் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.பி.அபேயகோன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய நிலையிலே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை நிர்வாக சேவையில் முதல்தர அதிகாரியான இவர் சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக, முஸ்லீம் சமய காலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளாராகவும், புத்தசாசன மதவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர், போன்ற பல பதவிகளை வகித்துவந்துள்ளார்.

பேருவளை ஜாமிய நளீமிய்யா கலாபீடத்தின் பழைய மாணவரர் என்பதும் குறிப்பிடக்கூடிய விடயமாகும். இவர் தமது புதிய கடமையினை எதிர்வரும் 2014 டிசம்பர் 01ம் திகதி திங்கள் கிழமை காலை தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ;ஷேய்க் எம்.ஐ.அமீர் அவர்களின் பதவிக்கான செயலகம் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :