வாழைச்சேனையில் 5ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

த.நவோஜ்-

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வெற்றி வழிகாட்டல் கல்வி நிலையத்தினால் இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கல்வி நிலைய ஆசிரியர் வ.துஷ்யந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கல்குடா கல்வி வலய கோட்டக் கல்வி பணிப்பாளர்களான நா.குணலிங்கம், ச.பரமேஸ்வரன், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வ.சின்னத்தம்பி, புதுக்குடியிருப்பு கிராம சேவை உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், கல்குடா வலயக் கல்வி இணைப்பாளர் செல்வி.சீ.லோகேஸ்வரி, வாகரை பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், பெற்றோர்கள், கல்வி பயிலும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வெற்றி வழிகாட்டல் கல்வி நிலையத்தில் கல்வி கற்று சித்தி பெற்ற 13 மாணவர்களுக்கு வெற்றிப் பதக்கம், நினைவுச் சின்னம், பரிசில்கள் என்பன அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு மேலும் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்ற ஏனைய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, இங்கு மாணவியின் நடனம் என்பன இடம்பெற்றது.

இதன்போது கல்வி நிலைய ஆசிரியர் வ.துஷ்யந்தன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், மேலும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆசிரியர் வ.துஷ்யந்தனால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வின் வரவேற்பின் போது அதிதிகள் மற்றும் சித்தி பெற்ற 13 மாணவர்களும் மாலை அணிவிக்கப்பட்டு ஏனைய மாணவர்களால் வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :