அர­சாங்­கத்தின் அரா­ஜ­கத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் ஆளுமை ஐ.தே.க. வுக்கே இருக்­கி­றது- இரா­ஜ­துரை எம்.பி

ர­சாங்­கத்தின் அரா­ஜக செயல்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்து மக்கள் நலன் சார்ந்த ஜன­நா­யக அர­சி­யலை முன்­னெ­டுக்­கக்­கூ­டிய ஆளுமை ஐ.தே.க.வுக்கே இருக்­கின்­றது. இன­வா­தி­களை வேர­றுத்து நாட்டை ஐக்­கிய பாதையில் இட்டுச் செல்ல ஐ.தே.க. வாலேயே முடியும் என்று நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பி. இரா­ஜ­துரை தெரி­வித்தார்.இது தொடர்பில் இரா­ஜ­துரை மேலும் கருத்து தெரி­விக்­கையில்;

இலங்­கையில் ஆட்சி புரியும் தற்­போ­தைய அர­சாங்கம் நாட்டில் முரண்­பாட்டுச் சூழ்­நி­லை­களை மேலெ­ழும்பச் செய்­தி­ருக்­கின்­றது. சகல மக்­களும் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றனர். 

குறிப்­பாக மலை­யக மக்கள் குறித்து அர­சாங்கம் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யு­ட­னேயே செயற்­ப­டு­கின்­றது. வரவு செலவு திட்­டத்தில் மலை­யக மக்கள் நலன் சார்ந்த விட­யங்கள் எதுவும் இல்லை. 

நான் இதனை அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்திக் கூறியும் எது­வித பயனும் இல்லை. மலை­யக மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­களை தீர்த்து வைத்தல், விலை­யேற்­றத்­தினை குறைத்தல் உள்­ளிட்ட பல கோரிக்­கை­களை அர­சாங்­கத்­திடம் முன்­வைத்த போதும் சாதக பதில்­களை அர­சாங்கம் வழங்கத் தவறி இருக்­கின்­றது.

1978 முதல் ஜனா­தி­பதி ஆட்சி முறை இருந்து வரு­கின்­றது. 1978 - 1993 ஆம் ஆண்­டு­க­ளுக்­கி­டையில் பெரிய மாற்­றங்கள் எதுவும் ஏற்­ப­டாத போதும் மலை­யக மக்­களின் பாரிய பிரச்­சி­னை­யாக இருந்த பிர­ஜா­வு­ரிமை பிரச்­சினை இக்­கா­லப்­ப­கு­தி­யி­லேயே தீர்த்து வைக்­கப்­பட்­டது. 

1994 இல் ஆட்­சிக்கு வந்த சந்­தி­ரிகா மலை­யக மக்கள் நலன் கருதி பல்­வேறு வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுத்தார். தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்­சினை ஏற்­ப­டுத்தி மலை­ய­கத்தின் அபி­வி­ருத்­திக்கு வலுச்­சேர்த்தார். மலை­யக மக்­களின் அபி­வி­ருத்தி கருதி பத்­தாண்டு தேசிய வேலைத் திட்டம் ஒன்­றையும் நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்தார். மின்­சார வச­தி­களை தோட்டத் தொழி­லா­ளர்­களின் குடி­யி­ருப்­பு­க­ளுக்கு சந்­தி­ரிகா பெற்­றுக்­கொ­டுத்து உத­வினார்.

இந்­நி­லையில் பின்னர் ஆட்­சிக்கு வந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மஹிந்த சிந்­த­னையில் மலை­யக மக்­களின் நலன்­க­ருதி பல வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுக்கப் போவ­தாக தெரி­வித்­தி­ருந்தார். எனினும் காத்­தி­ர­மான வேலைத் திட்­டங்கள் எதுவும் மலை­ய­கத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. வாக்­கு­று­திகள் அனைத்தும் பொய்த்துப் போயுள்ள நிலையில் இன்­றைய அர­சாங்கம் மலை­யக மக்­களை மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யு­ட­னேயே நோக்­கு­கின்­றது. 

இதற்கு அர­சாங்­கத்தில் உள்ள இன­வாத கட்­சி­களின் ஆத­ரவு பெரும் பல­மாக இருந்து வரு­கின்­றது.

அர­சாங்­கத்தின் பிழை­யான செயற்­பா­டு­களை பொறுத்துக் கொள்ள முடி­யாது அக்­கட்­சியின் முக்­கிய அமைச்­சர்கள் உட்­பட மேலும் பலர் வெளி­யே­றிய வண்­ண­முள்­ளனர். இந்­நி­லையில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்­காவும் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணிலும் இணைந்து தேசிய அர­சாங்கம் ஒன்­றினை ஏற்­ப­டுத்தும் நிலைக்கு வித்­திட்­டுள்­ளனர். 

ஐ.தே. கட்சி மலை­யக மக்­களின் அடிப்­படை தேவை­களில் ஒன்­றான காணி மற்றும் வீட்­டு­ரிமை குறித்த விட­யங்கள் தொடர்­பாக சாத­க­மான பதி­லினை எமக்கு வழங்கி இருக்­கின்­றது.

அர­சியல் நட­வ­டிக்­கைகள் குறித்து நாம் தீர்க்­க­மாக சிந்­திக்­கவும் செயற்­ப­டவும் வேண்டியுள்ளது. 

இந்நிலையில் கட்சி அரசியல் சுய இலாபங்களுக்காக மலையக மக்களை அரசிடம் அடகு வைக்கும் செயற்பாடுகளில் எமது தொழிற்சங்க தலைமைகள் ஈடுபட்டு வருகின்றமை வருந்தத்தக்க விடயமாகும். மலையக மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கையினையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடிய ஆளுமை ஐ.தே.க.விற்கே உண்டு என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :