தேர்தல் விஞ்ஞாபனங்களை பொறுத்தே இறுதி தீர்மானம் - மு.கா.வின் உயர்பீடக் கூட்டத்தில் முடிவு

னாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கமா அல்­லது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சாங்­கமா என்­பதை விடவும் யார் முஸ்­லிம்­களை பாது­காக்கப் போகின்­றனர் என்­பதே எமது கேள்வியாகும். இரு­வ­ரி­னதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்களைப் பொறுத்தே எமது இறுதித் தீர்­மானம் அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.

ஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக கட்சியின்

உயர்பீடக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.

பம்­ப­லப்­பிட்டி சிலோன் சிட்டி ஹோட்­டலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்றுக்காலை இந்தக் கூட்டம் ஆரம்பமானது.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மாகாண சபை உறுப்­பி­னர்கள் என கட்சியின் முக்கியஸ்தர்கள் அனை­வரும் இக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். சுமார் ஐந்து மணி நேரம் நீடித்­த இக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

உயர்பீடக் கூட்டத்தின் தீர்­மா­னங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் ஹசன் அலி தெரி­விக்­கையில்;

ஜனா­தி­பதித் தேர்­தலில் பல திட்­ட­மி­டாத மற்றும் எதிர்­பா­ராத திருப்­பங்கள் ஏற்­பட்­டுள்­ளன. எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எப்­போதும் சிந்­தித்து சரி­யா­னதும் முஸ்லிம் மக்­களை பலப்­ப­டுத்தக் கூடி­ய­து­மான முடி­வு­க­ளையே எடுக்கும். இன்று எமது கட்சி உயர் பீடக்­கூட்­டத்­திலும் பல்­வேறு விடங்கள் குறித்தும் சாத­க­மான கார­ணிகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவா அல்­லது பொது எதி­ர­ணியினரா என்­பதை விடவும் முஸ்லிம் மக்கள் தொடர்பிலும் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூ­கத்தின் பாது­காப்பு தொடர்பிலும் அக்­க­றையும் அதற்­கான வேலைத் திட்­டத்­தி­னையும் மேற்­கொள்ளும் ஒரு­வ­ருக்கே எமது ஆத­ரவு வழங்க வேண்டும்.

மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இணைந்த போது பல கொள்கைத் திட்­டத்­தினை நாம் முன்­வைத்­தி­ருந்தோம். அவற்றில் சில நிறை­வேற்­றப்­பட்டும் பல விட­யங்கள் இன்­னமும் இழு­பறி நிலை­யிலும் உள்­ளன. எனவே, இப்­போதும் நாங்கள் எமது நிலைப்­பாட்டில் உறு­தி­யா­கவே உள்ளோம். எமது இலக்கு முஸ்லிம் சமூ­கத்­தினை பிர­தி­ப­லிப்­பது மட்­டுமே ஆகும். ஆகவே, இரு சாராரும் முன்­வைக்கும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்களைப் பொறுத்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது இறுதித் தீர்மானத்தினை எடுக்கும்.

மீண்டும் கட்சியின் உயர் மட்டக்குழு கூடி சாதகமான தீர்மானமெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :