அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளர்களின் கோப்புக்கள் என்னிடம் உள்ளன-ஜனாதிபதி

ரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான கோப்புக்கள் என்னிடம் உள்ளன. எனினும் அவர்களுக்கு எதிராக அவற்றை பயன்படுத்தமாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

அரசாங்கத்தின் கதவுகள் எப்போதுமே சலூன் கதவுகளை போன்றே உள்ளன. யாரும் வரலாம். யாரும் போகலாம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். 
திருகோணமலை மற்றும் அனுராதபுரம் ஆகியவற்றுக்கு இடையிலான ஏ-12 வீதியை நேற்று திறந்து வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் கூறியதாவது
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் இதற்கு முன்னர் கட்சியைவிட்டு விலகிச் சென்று மீண்டும் கட்சியில் இணைந்துகொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இவ்வாறு செய்துள்ளார். ஆனால் நான் ஒருபோதும் இவ்வாறு செய்ததில்லை. 

அரசாங்கத்துக்குள்ளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் சிறந்த சுதந்திரம் காணப்படுகின்றது. அதனை அனைவரும் அனுபவிக்கலாம். அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான கோப்புக்கள் என்னிடம் உள்ளன. 

எனினும் அவர்களுக்கு எதிராக அவற்றை பயன்படுத்தமாட்டேன். அரசாங்கத்தின் கதவுகள் எப்போதுமே சலூன் கதவுகளை போன்றே உள்ளன. யாரும் வரலாம். யாரும் போகலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :