தமிழ்-முஸ்லிம் மக்­க­ளையும் நம்­பியே நாம் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான போராட்­டத்தில் கள­மி­றங்­கி­யுள்ளோம்-ஐ.தே.க

ர­சாங்­கத்தை வீழ்த்தும் பொது எதி­ர­ணியில் சிங்­கள மக்­களை போல் தமிழ், முஸ்லிம் மக்­க­ளையும் நம்­பியே கள­மி­றங்­கு­கின்றோம். பொதுஎதி­ர­ணியில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் எம்­முடன் கைகோர்க்க வேண்டும் என தெரி­விக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி எமது அர­சாங்­கத்தில் தமிழ் மக்­களின் இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு எட்­டப்­படும் எனவும் குறிப்­பிட்­டது.

பொது எதி­ரணிக் கூட்­டிற்­காக தமிழ் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வீர்­களா? இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் பொது எதி­ரணி என்ன செய்யப் போகின்­றது என்­பன தொடர்பில் வின­விய போதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான லக்ஸ்மன் கிரி­யெல்ல மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

அர­சாங்­கத்தின் மீதான அதி­ருப்தி சிங்­கள மக்­க­ளுக்கு இருக்­கின்­றது. ஆனால், அதை­விட அதி­க­மான வெறுப்பும் அதி­ருப்­தியும் தமிழ் முஸ்லிம் மக்­க­ளுக்கே இருக்­கின்­றது. அவர்கள் ஒரு சந்­தர்ப்­பத்­திலும் அர­சாங்­கத்தை ஆத­ரிக்கப் போவ­தில்லை. இன்று வடக்கு கிழக்கில் இடம்­பெறும் அடக்கு முறை­களும் இன­வாதச் செயற்­பா­டு­களும் முற்­றிலும் அர­சாங்­கத்­தி­னா­லேயே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இவற்றில் சிக்கித் தவிக்கும் சிறு­பான்மை மக்கள் இனியும் இந்த அரசை ஆத­ரிக்கப் போவ­தில்லை.

தமிழ் - முஸ்லிம் மக்­க­ளையும் நம்­பியே நாம் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான போராட்­டத்தில் கள­மி­றங்­கி­யுள்ளோம். 

வெறு­மனே சிங்­கள மக்­களின் வாக்­கு­க­ளையும் ஆத­ர­வையும் நம்பி அர­சாங்கம் கூட செயற்­ப­டு­வ­தில்லை. சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­களும் கட்­டா­ய­மா­னது. எனவே, தற்­போது நாம் உரு­வாக்­கி­யுள்ள பொது எதி­ர­ணியில் சகல மக்­க­ளையும் சகல கட்­சி­க­ளையும் உள்­வாங்­குவோம். சிங்­கள தமிழ் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவும் ஐக்­கிய தேசியக் கட்சி மட்­டு­மன்றி ஜே.வி.பி., ஹெல உறு­மய, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என அனை­வ­ரி­னதும் ஆத­ர­வினை எதிர்­பார்க்­கின்றோம். அனை­வ­ரி­னதும் கொள்­கை­களும் கோரிக்­கை­களும் உள்­வாங்­கப்­பட வேண்டும் என்­பதில் நாங்கள் உறு­தி­யாக உள்ளோம்.

அதே போல் தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் இந்த அரசு நாட­க­மா­டு­கின்­றது.யுத்தம் முடி­வ­டைந்து அதன் பின்னர் வட மாகாண சபைத் தேர்தல் நடந்தும் ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெற்றும் இது­வ­ரையில் தமிழ் மக்கள் எதிர்­பார்க்கும் தீர்வு இந்த அர­சாங்­கத்­தினால் முன் வைக்­கப்­ப­ட­வில்லை. ஐக்­கிய தேசியக் கட்சி 2004 ஆம் ஆண்டு சமா­தான ஒப்­பந்தம் செய்து நாட்டில் இனப்­பி­ரச்­சி­னை­யினை முடி­விற்கு கொண்­டு­வர முயற்­சித்­தி­ருந்­தது. ஆனால், இந்த அர­சாங்கம் யுத்­தத்தின் பின்­னரே வடக்கில் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பினை பலப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே, தமிழ் மக்கள் யதார்த்தம் என்­ன­வென்­பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் ஜன­நா­ய­கத்­தினை கட்­டி­யெ­ழுப்­பவும் மனித உரி­மை­களை பாது­காக்­க­வுமே முயற்­சிக்­கின்றோம். இந்த பட்­டி­யலில் தமிழ் மக்­களின் இனப் பிரச்­சி­னைக்­கான தீர்­வுக்கு நிச்­சயம் இட­முண்டு. இதனை பெற்­றுக்­கொள்ள தமிழ் மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும். அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனியும் முஸ்லிம் மக்களை ஏமாற்றாது சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இனியும் அரசுடன் கூட்டு சேர்ந்தால் ஒரு முஸ்லிம் வாக்கேனும் உங்களுக்கு கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :