முஸ்லிம் காங்கிரஸ் மக்களிடையே இனக்குரோதத்தை ஏற்படுத்தி வருகிறது:விஜேயதாஸ ராஜபக்ஷ எம்.பி. குற்றச்சாட்டு

நாட்டில் சிங்­கள – முஸ்லிம் மக்­க­ளி­டையே இனக்­கு­ரோ­தத்தை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் அமைச்சர் ரவூப் ஹக்­கீமும் முன்­னெ­டுத்து வரு­வ­தாக ஐ.தே.கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­தாஸ ராஜபக் ஷ நேற்று சபையில் குற்றம் சாட்­டினார்.

இந்­தி­யாவில் நீதித்­துறை சுயா­தீ­ன­மாக இயங்­கு­கின்­றது. அந்­நிலை இங்கு உரு­வா­வதன் மூலமே சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நாட்டில் நிலை நிறுத்த முடியும் என்றும் அவர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற வரவு செல­வுத்­திட்டம் மீதான சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்­பான குழு­நிலை விவா­தத்தை எதிர்க்­கட்சி தரப்பில் ஆரம்­பித்து வைத்து உரை­யாற்றும் போதே விஜே­தாச ராஜபக் ஷ எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

அன்று நாட்டில் தமிழ் - சிங்­கள இனங்­க­ளி­டையே குரோ­தங்­களை ஏற்­ப­டுத்தி பாரிய அழி­வு­க­ளுக்கு வித்­திட்ட அமிர்­த­லிங்கம் யோகேஸ்­வரன் போன்று இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் ரவூப் ஹக்­கீமும் சிங்­கள - முஸ்லிம் மக்­க­ளி­டையே குரோ­தங்­க­ளையும் மோதல்­க­ளையும் ஏற்­ப­டுத்த முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றார்.

அம்­பா­றையில் தனி­யான கரை­யோர முஸ்லிம் பிரிவு தேவை­யென ஹக்கீம் கோரி­யுள்ளார்.

இந்­நி­லைமை சிங்­க­ள­வர்கள் மத்­தி­யிலும் உரு­வானால் என்ன நடக்கும் ? அம்­பா­றையில் முஸ்­லிம்­க­ளுக்கு தனி நிர்­வாக மாவட்டம் தேவை­யென கோரப்­ப­டு­கி­றது. இதே­போன்று தெற்கில் கிழக்கில் சிங்­க­ள­வர்­களும் ஏனைய இனத்­தோரும் தனித்­தனி நிர்­வாக மாவட்­டங்­களை கோரி

னால் நாட்டின் நிலை என்­ன­வாகும் ?

பிர­பா­க­ரனைப் போன்று ஹக்­கீமும் இன்று முஸ்லிம் தனி நிர்­வா­கத்தை கேட்­கின்றார். இதன் மூலம் சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­க­ளி­டையே குரோ­தத்­தையும் மோதல்­க­ளையும் ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்றார்.

முஸ்லிம் காங்­கிரஸ் ஆரம்­பிக்­கப்­பட்ட பின்னர் தான் இரு இனங்­க­ளி­டை­யேயும் குரோதம் தலை தூக்­கு­கின்­றது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பொது­ப­ல­சேனா நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாக குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்த போது நாமும் முஸ்­லிம்­க­ளுக்­காக குரல் கொடுத்தோம்.

ஆனால் இன்று ஹக்கீம் என்ன செய்­கின்றார் ? இரு இனங்­க­ளி­டையே மோதல்­களை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்றார்.

வட மாகா­ணத்தில் அடிப்­படை வச­தி­களை மேம்­ப­டுத்­து­வதால் அதி­வேக பாதை­களை அமைப்­பதால் வடக்கின் பிரச்­சி­னையை தீர்க்க முடி­யு­மென நினைத்து அரசு செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றது.ஆனால் இந்த நட­வ­டிக்­கை­களால் மட்டும் வடக்கின் பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யாது.

மாறாக தமிழ் மக்­களின் மனங்­களை வெற்றி கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அரசு மேற்­கொள்ள வேண்டும்.

இதன் மூலமே வடக்கின் பிரச்­சி­னையை தீர்க்க முடியும். காங்­கே­சன்­துறை சீமெந்து தொழிற்­சா­லையை ஆரம்­பித்து அங்கு தொழிற்­சா­லை­களை ஆரம்­பிக்க வேண்டும் மக்­க­ளுக்கு தொழில்­களை வழங்க வேண்டும்.

இவ்­வா­றான செயற்­பா­டுகள் மூலமே மக்­களின் நம்­பிக்­கையை பெற முடியும். ஆனால் காங்­கே­சன்­து­றையில் தொழிற்­து­றையை ஆரம்­பிப்­பதை விடுத்து அங்கு இரா­ணு­வத்­தினர் நிலை நிறுத்­தப்­பட்­டுள்­ளனர். வடக்கில் மட்­டு­மல்ல தெற்கில் இவ்­வா­றான நிலை தலை­தூக்கி வரு­கின்­றது. செவ­ன­க­லவில் பாது­காப்பு பயிற்சி நிறு­வகம் ஒன்று அமைக்­கப்­பட்டு வரு­கின்­றது. மொர­கம பிர­தே­சத்­தி­லேயே இது அமைக்­கப்­பட்டு வரு­கி­றது. இதனால் அப்­பி­ர­தேச மக்கள் பாரிய நெருக்­க­டி­களை சந்­தித்­துள்­ளனர் என்றார்.

இது தொடர்­பாக அப்­பி­ர­தேச மக்கள் எம்­மிடம் முறைப்­பா­டு­களை முன் வைத்­துள்­ளனர். தற்­போது அங்கு சிறு சிறு சம்­ப­வங்கள் தலை­தூக்­கி­யுள்­ளன. எதிர்­கா­லத்தில் இவை பார­தூ­ர­மான பிரச்­சி­னை­க­ளாக தலை­தூக்கும். பின்னர் கிளர்ச்­சி­க­ளாக மாறும். எமது வர­லாற்றில் அனு­பவம் பெற்­றுள்ளோம்.

இன்று தமிழ் நாட்டின் முத­ல­மைச்­ச­ரான ஜெய­ல­லி­தா­வுக்கு எதி­ராக நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்டு தண்­ட­னையும் விதிக்­கப்­பட்­டது.

அதே­போன்று வெளி­நா­டு­களில் கறுப்பு பணம் வைத்­தி­ருக்கும் இந்­தி­யர்­களின் பெயர்­களை அந்­நாட்டு அரசு நீதி­மன்­றத்­திற்கு கைய­ளிக்­க­வில்லை. இன்று என்ன நடந்­துள்­ளது? அப்­பெயர் பட்­டி­யலை உட­ன­டி­யாக கைய­ளிக்­கு­மாறு இந்­திய உயர்­நீ­தி­மன்றம் அந்­நாட்டு அர­சுக்கு உத்தரவிட்டுள்ளது.

அரசும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. அந்தளவிற்கு இந்தியாவின் நீதித்துறை சுயாதீனமாக செயற்படுகின்றது.

இவ்வாறான நிலைமை எமது நாட்டிலும் உருவாக வேண்டுமென்பதே எமது மக்களினதும் எதிர்பார்ப்பாகவுள்ளன.

மக்கள் மட்டுமல்ல ஆட்சியாளர்களும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். அவ்வாறானதொரு நிலைமை உருவாகும் போதுதான் நாட்டில் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று விஜேதாச ராஜபக் ஷ எம்.பி. தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :