தேர்­த­லுக்­கான திக­தியை நிர்­ண­யிக்கும் அதி­காரம் தேர்­தல்கள் ஆணை­யா­ள­ருக்கே உள்­ளது-ரணில்

னா­தி­ப­தியின் பதவிக்காலம் முடி­வ­டை­வ­தற்கு முன்­ப­தாக புதி­ய­தொரு ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அறி­விப்பை விடுக்கும் அதி­காரம் தற்­போது பத­வி­யி­லுள்ள ஜனா­தி­ப­திக்கு உள்­ளது. ஆனால் தேர்­த­லுக்­கான திக­தியை நிர்­ண­யிக்கும் அதி­காரம் தேர்­தல்கள் ஆணை­யா­ள­ருக்கே உள்­ளது என எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

நாட்டில் இன்று அனைத்து அதி­கா­ரங்­க­ளையும் நிறை­வேற்று அதி­காரம் பறித்துக் கொண்டு பாரா­ளு­மன்றம், நீதித்­துறை அமைச்­ச­ர­வையை வலு­வி­ழக்கச் செய்­துள்­ள­தா­கவும் எதிர்க்­கட்சித் தலைவர் குற்றம் சாட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற வரவு–செலவுத் திட்­டத்தின் குழுநிலை விவா­தத்தில் உரை­யாற்றும் போதே எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார்.

எதிர்க்­கட்சித் தலைவர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

தற்­போது பத­வி­யி­லுள்ள ஜனா­தி­ப­திக்கு தனது பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு முன்பு ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அறி­விப்பை வெளி­யிட முடியும்.

அந்த அதி­காரம் பத­வி­யி­லுள்ள ஜனா­தி­ப­திக்கு உள்­ளது. மக்கள் ஆணையைக் கோரு­வ­தற்கு எந்­த­வி­த­மான தடையும் இல்லை. ஆனால், தேர்­த­லுக்­கான திக­தியை நிர்­ண­யிக்கும் அதி­காரம் தேர்­தல்கள் ஆணை­யா­ள­ருக்கே உள்­ளது. இது அர­சி­ய­ல­மைப்பில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

நாட்டில் இன்று மக்­களின் இறை­யாண்மை மீறப்­பட்­டுள்­ளது. அனைத்து அதி­கா­ரங்­க­ளையும் நிறை­வேற்று அதி­காரம் பறித்துக் கொண்­டுள்­ளது. நீதித்­துறைஇ பாரா­ளு­மன்றம்இ அமைச்­ச­ரவை அதி­கா­ரங்கள் அனைத்தும் நிறை­வேற்று அதி­கா­ரத்தால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே இன்­றைய ஜனா­தி­ப­திக்­கான நிதி­யொ­துக்­கீடு குழுநிலை விவாதம் நடை­பெ­று­கி­றது.

கடந்த காலங்­க­ளிலும் வரவு–செலவுத் திட்டம் மீதான விவா­தத்­திற்கு போது­மான நாட்கள் ஒதுக்­கப்­ப­ட­வில்லை. இவ் வரு­டமும் அதே நிலைமை தான் உரு­வா­கி­யுள்­ளது. வரவு–செலவுத் திட்டம் என்­பது நாட்டின் நிதி நிர்­வா­கத்தில் முக்­கி­ய­மா­ன­தாகும். நிதி நிர்­வாகம் பாரா­ளு­மன்­றத்தின் கட்­டுப்­பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் இன்று நிதி நிர்­வாகம் பாரா­ளு­மன்­றத்­தி­ட­மி­ருந்து கை நழுவிப் போயுள்­ளது.

1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பின் மூலம் மக்­களின் இறை­யாண்மை வாக்­கு­ரிமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மக்கள் தமது வாக்­கு­களை பயன்­ப­டுத்தி நிறை­வேற்று அதி­கா­ரத்தைத் தெரிவுசெய்ய முடியும். வாக்குப்பலம் மக்­க­ளு­டை­யது. அதற்­க­மைய தேர்­தல்கள் ஆணை­யா­ளரால் தேர்­தலை நடத்த முடியும். அதற்­கான சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

ஆனால்,இன்று தேர்தல் தினத்தை நடத்­து­வது தொடர்பில் சோதி­டர்­களின் கணிப்­புக்­களை அடிப்­ப­டை­யாக வைத்து தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது மட்­டு­மன்றி ஜனா­தி­பதிஇ பிர­தமர் போன்­றோர்­க­ளுடன் தேர்தல் தினம் தொடர்­பாக பேச்சு நடத்தவேண்­டிய நிலை தேர்­தல்கள் ஆணை­யா­ள­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது.

இதனால்,அர­சி­ய­ல­மைப்பில் உள்ள தேர்­தல்கள் ஆணை­யா­ளரின் அதி­கா­ரங்­களை பாது­காக்க முடி­யாமல் உள்­ளது.

அதனை பாது­காக்க தேர்­தல்கள் ஆணை­யாளர் நட­வ­டிக்­கை­ எடுக்க வேண்டும். தேர்­தல்­களை நடத்­து­வ­தற்கு பொலி­ஸாரின் ஒத்­து­ழைப்பு தேர்­தல்கள் ஆணை­யா­ள­ருக்கு தேவை. ஆனால் இன்று பொலிஸ் உய­ர­தி­கா­ரிகள் அரச ஊழி­யர்­களை அழைத்து அல­ரி­மா­ளி­கையில் கூட்­டங்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. அர­சாங்­கத்தை பாது­காக்க வேண்டும். தேர்­த­லுக்கு ஒத்­து­ழைக்க வேண்­டு­மென அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

பொலி­ஸாரும் அரச ஊழி­யர்­களும் அர­சாங்­கத்தைப் பாது­காக்கும் கடப்­பா­டு­டை­ய­வர்கள் அல்ல. அவர்கள் இலங்கை குடி­ய­ரசை பாது­காக்கும் கடப்­பா­டு­டை­ய­வர்கள். ஆனால், அரச ஊழி­யர்கள் தேர்­த­லுக்­காக வேலைசெய்வதற்கு வற்புறுத்தப்படுகின்றார்கள். தேர்தலுக்கு முன்பதாகவே அனைத்தும் அரசியல் மயமாக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் என்பது அரசியலமைப்பு ரீதியாக மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமையாகும். எனவே, தற்போதுள்ள ஜனாதிபதியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதா? அல்லது புதியவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதா என்பது தொடர்பில் தீர்மானிப்பது மக்களின் உரிமையாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :