சவுதி அரேபியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5பேர் பலி!

வுதி அரேபியா நாட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

சவுதி அரேபியா நாட்டின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது அல்-ஆஹ்சா மாவட்டம். இது அங்கு வாழும் சிறுபான்மை பிரிவான ஷியா முஸ்லிம்களின் இரு முக்கிய மையங்களில் ஒன்றாகும். இங்குள்ள அல்-டல்வா நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து நேற்று மாலை பொதுமக்களில் சிலர் ஒரு குழுவாக சென்று கொண்டிருந்தனர்.

அவர்களை நோக்கி முகமூடி அணிந்த 3 பேர் தங்களிடம் இருந்த இயந்திர துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் ஆகியவற்றை கொண்டு திடீர் என துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர் என்று காவல் துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு பகுதி அருகே நடந்துள்ளதாக கூறப்படும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :