மஹிந்த,மைத்திரிபாலவுடன் நாம் பேச்சு நடத்துவோம்-ஞானசார தேரர்

னா­தி­பதி தேர்­தலில் யாரை ஆத­ரிக்கப்போகின் றோம் என்­பதில் இறுதி முடிவு எடுக்­க­வில்லை. இருவேட்­பா­ளர்­களும் பௌத்த கொள்­கை­யினை காப்­பாற்ற என்ன செய்யப்போகின்­றார்கள் என்­பதைப் பொறுத்தே பொது­ப­ல­சேனா

முடி­வெ­டுக்கும் என தெரி­விக்கும் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மஹிந்த ராஜ­பக்ஷ மைத்­தி­ரி­பால இரு­வ­ரு­டனும் பேசுவோம் எனவும் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­ப­ல­சேனா எவ்­வா­றான முடி­வு­களை எடுக்கப் போகின்­றது என்­பதை வின­விய போதே பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

ஜனா­தி­பதித் தேர்­தலில் யார் வெற்றி பெறப் போகின்­றனர். நாங்கள் யாரை ஆத­ரிக்கப் போகின்றோம் என்­பது தொடர்பில் இது­வ­ரையில் நாங்கள் தீர்­மானம் எதையும் எடுக்­க­வில்லை. எனினும் எங்­க­ளிடம் கொள்கைத் திட்டம் உள்­ளது. பௌத்த சிங்­கள கொள்­கை­யி­னையும் பௌத்த சாச­னத்­தி­னையும் உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக சிறந்த தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

ஜனாதிபதியா மீண்டும் மஹிந்த ராஜபக் அல்லது புதிய தலைவராக மைதிரிபால சிறிசேன வரப்போகின்றாரா என்பதை விடவும் இவர்கள் இருவரும் பௌத்த கொள்கையினை காப்பாற்ற என்ன செய்யப் போகின்றனர் என்பதே முக்கியமானது.

பௌத்த சாசனத்தினை பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித் திட்டம் எம்மிடம் உள்ளது. அதை இந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல் இரு வேட்பாளர்களிலும் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனத்தினைப் பொருத்தே தாம் தீர்மானம் எடுக்க வேண்டும் . இப்போது நாங்கள் அவசரப்படுவதனால் எந்தவித சாதக முடிவுகளும் ஏற்படக் போவதில்லை.

மேலும் நாங்கள் பௌத்த கொள்கையின் அடிப்படையில் செயற்படும் அமைப்பினர் . எமக்கு பௌத்த சிங்கள மக்களின் ஆதரவு இருக்கின்றது. எனவே நாங்கள் நாட்டிற்கும் மக்களுக்கும் சாதகமான வகையிலேயே முடிவுகளை எடுப்போம். எவை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜ பக் ஷ மற்றும் மைதிரிபால சிறிசேன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளோம். இரு தரப்புடனும் பேசி நாட்டிற்கு சாதகம் எதுவோ அந்த முடிவினை எடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :