மண்டேலா, மகாத்மா காந்தியின் கொள்கையை பின்பற்றி ஜனநாயகத்தை வென்றெடுப்பேன்- மைத்திரி

ருண்ட ஆட்­சியில் இருந்து நாட்டை விடு­விக்­கவே அரசை விட்டு வெளி­யே­றி­யுள்ளேன். நெல்சன் மண்­டேலா, மகாத்­மா­ காந்­தியின் கொள்­கை­யினை பின்­பற்றி இந்த நாட்டில் ஜன­நா­ய­கத்­தினை வென்­றெ­டுப்பேன் என உறு­தி­ய­ளித்­துள்ள மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி மஹிந்­த­வுடன் போட்­டி­யிட அதி­கார பலமோ பண­ப­லமோ என்­னிடம் இல்லை. மக்­களின் பலத்­தினை நம்­பியே களத்தில் குதித்­துள்ளேன். மக்கள் என்னை கைவி­ட­வேண்டாம் எனவும் தெரி­வித்தார்.

பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­யுள்ள மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் காரி­யா­ல­யத்தில் அக்­கட்­சியின் மாவட்ட, மாகாண அமைப்­பா­ளர்­களை சந்­தித்­தி­ருந்தார். இதன் போதே ஐக்­கிய தேசிய கட்­சியின் மேடையில் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அதேபோல் தனது உரை­யினை

ஆரம்­பிக்­கும்­போது வணக்கம், ஆயு­போவன், அஸ்­ஸ­லா­மு­அ­லைக்கும் என மூவின மக்­க­ளையும் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தி தனது பேச்சை ஆரம்­பித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்;

நான் நீண்ட கால­மாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­ன­ராக இருந்­துள்ளேன். நான் பண பலத்­திலும் அர­சியல் செல்­வாக்­கிலும் அர­சாங்­கத்­திற்கு வர­வில்லை. நான் விவ­சாய குடும்­பத்தை சேர்ந்­தவன். மக்­களின் பசி, வறுமை, துன்பம் அனைத்­தையும் உணர்ந்­தவன். இன்று வரையில் நான் அவ்­வாறே வாழ்ந்துக் கொண்­டி­ருக்­கின்றேன். இன்று நான் பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­ய­வுடன் மக்கள் என்னை ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்­கா­ரனா அல்­லது ஐக்­கிய தேசி­யக்­கட்சி காரனா எனப் பார்க்­கின்­றனர். இதில் மக்கள் சிந்­திப்­ப­தற்கு ஒன்றும் இல்லை. இப்­போது உரு­வாக்­கி­யி­ருப்­பது ஜன­நா­யக்­கூட்­டணி. அதன் வேலைத்­திட்டம் மிகவும் பரந்­தது. கடந்த காலங்­களில் அர­சாங்கம் கொடுத்த பொய் வாக்­கு­று­தி­களை தகர்த்­தெ­றிய ஜன­நா­ய­கத்­தினை வென்­றெ­டுக்க உரு­வாக்­கி­யுள்ள புதிய கூட்­டணி.

இலங்­கையில் இன்று இருண்ட யுகம் நில­வு­கின்­றது. அன்று இந்­தி­யாவில் தென்­னா­பி­ரிக்­காவில் இவ்­வா­றான இருண்ட யுகம் நில­வி­யது. அன்று நெல்சன் மண்­டேலா 27 ஆண்­டுகள் சிறை­வாசம் சென்று பின்னர் தென்­னா­பி­ரிக்­காவை ஜன­நா­யக நாடாக மாற்­றி­யி­ருந்தார். மகாத்மா காந்தி இந்­தி­யாவில் அஹிம்சைப் போராட்­டத்தின் மூலம் விடு­வித்தார். நான் மகாத்­மாவோ அல்­லது நெல்சன் மண்­டே­லாவோ அல்ல. ஆனால் நான் அவர்­களின் கொள்­கை­யினை பின்­பற்றி இலங்­கை­யினை சூழ்ந்­துள்ள அரா­ஜக ஆட்­சியில் இருந்து நாட்­டிற்கு விடு­த­லை­யினை பெற்­றுக்­கொ­டுப்பேன்.

2015ம் ஆண்டு ஜன­நா­யக ஆட்­சிக்­கான ஆண்­டாக அமைய வேண்டும். மக்கள் தமது உரி­மை­களை வெற்று மூவின மக்­களும் ஒற்­று­மை­யுடன் வாழும் அர­சாங்­க­மாக உரு­வாக வேண்டும். அதற்கு எமது கூட்­டணி துணை நிற்கும். இன்று போராட்டம் ஏற்­பட்­டுள்­ளது. மகிந்த ராஜபக் ஷ என்று சர்­வா­தி­க­ளுக்கும் ஜன­நா­யக வாதி­க­ளுக்­குமே. எனவே இந்த ஆட்­சி­யினை வென்­றெ­டுக்க சக­லரும் சகல கட்­சி­களும் எம்­முடன் இணைய வேண்டும். நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து இந்த ஆட்­சி­யினை மாற்­றி­ய­மைக்க வேண்டும். இதுவே தனித்­தனி கொள்­கைக்­கொண்ட புதிய கூட்­டணி. இதில் 100 நாட்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து பொது கொள்­கையில் போராட வேண்டும். பின்னர் தத்­த­மது சுய கொள்­கையில் செயற்­பட முடியும்.

மகிந்த ராஜபக் ஷவை வீழ்த்த வேண்­டிய பொது வேட்­பாளர் எவ்­வாறு இருக்க வேண்டும் என்­பது சக­ல­ருக்கும் தெரிந்­தி­ருக்கும். மஹிந்­தவின் பணப்­பலம் அதி­காரப் பலம் அனை­வ­ரையும் அழித்­து­விடும். அப?????? நான் களத்தில் குறித்­துள்ளேன். அவ­ரைப்போல் பண­ப­லமோ ஆயுத அதி­கார பலமோ என்­னிடம் இல்லை. நான் பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­யது எனது குடும்­பத்தின் உயிரை பணயம் வைத்தே. எனவே இன்று நான் என்னை பொது மக்­க­ளிடம் ஒப்­ப­டைத்­துள்ளேன். எனக்­கான பாதுகாப்பினை இனிமேல் பொது மக்கள் தான் வழங்க வேண்டும். இம்முறை என்னை ஆதரிக்க வேண்டியது நீங்கள் தான். எனவே என்னையும் எனது மனச்சாட்சியினையும் நம்பி எனக்கு வாக்களியுங்கள்.

இம்முறை நாம் தவறவிடக்கூடாது. ஜனநாயகத்தையும் உரிமைகளையும் வென்றெடுக்க சகல மக்களும் என்னுடன் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :