"அரசியல் கட்சியின் தலைவரிடம் பைல்கள் இருப்பது வழமையாகும்'

ரு அர­சியல் கட்­சியின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விடம் கட்­சியின் உறு­ப்பி­னர்கள் அனை­வ­ரி­னதும் பைல்கள் இருக்கும். அந்தப் பைல்­களில் உறுப்­பி­னர்­களின் நல்­லது கெட்­டது என அனைத்தும் இருக்கும் என்று உயர்­கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பைல் நாட்டு மக்­க­ளிடம் உள்­ளது. அதற்­கான தமது நிலைப்­பாட்டை மக்கள் காட்­டு­வார்கள் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் மேலும் குறிப்­பி­டு­கையில்

அர­சியல் கட்­சியின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விடம் கட்­சியின் உறு­ப­பி­னர்கள் அனை­வ­ரி­னதும் பைல்கள் இருக்கும். அந்தப் பைல்­களில் உறுப்­பி­னர்­களின் நல்­லது கெட்­டது என அனைத்தும் இருக்கும். முக்­கி­ய­மாக என்­னு­டைய பைலில் விண்­ணப்­ப­ப­டிவம் முதல் அனைத்து விட­யங்­களும் இருக்கும். நான் தவ­றுகள் செய்­தி­ருந்தால் அந்த விட­யமும் இதில் இருக்கும். எனது சாத­னை­களும் இருக்கும். அனைத்து உறுப்­பி­னர்கள் தொடர்­பா­கவும் பைல்கள் இருக்கும்.

கட்­டாயம் உறுப்­பி­னர்கள் தொடர்­பாக பைல்­களை பேண­வேண்டும். அதி­லி­ருந்து அந்த உறுப்­பி­னரின் அனைத்து விப­ரங்ளை பெறலாம். அனைத்து உறுப்­பி­னர்­க­ளி­னதும் பைல்­களும் இருக்கும். ஜனா­தி­ப­தியின் பைல் மக்­க­ளிடம் உள்­ளது. அது தொடர்பில் யாரும் குழப்­ப­ம­டை­ய­வேண்­டி­ய­தில்லை. இது சாதா­ரண நடை­மு­றை­யாகும்

ஹுனைஸ் பாருக்

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹுனைஸ் பாருக் அர­சாங்­கத்­துடன் பிர­ச­சினை கார­ண­மாக வெளி­யே­ற­வில்லை. அவ­ரது கட்­சியின் தலைவர் ரிஷாத் பதி­யு­தீ­னுடன் ஏற்­பட்ட கருத்து முரண்­பாடு கார­ண­மா­கவே சென்­றுள்ளார். ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் பாரா­ளு­மன்றத் தேர்தல் வரலாம். அப்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹுனைஸ் பாருக்­குக்கு அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் வேட்பு மனு கொடுக்­காமல் விடலாம். எனவே அவர் அவ்­வா­றான தீர்­மா­னத்தை எடுத்­தி­ருக்­கலாம்.

பஷிலே கட்­சியை மறு­சீ­ர­மைத்தார்

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியை பொறுத்­த­மட்டில் மைத்­தி­ரி­பால சிறி­சேன பொதுச் செய­லா­ள­ராக இருந்த காலத்தில் கட்­சியை உரிய முறையில் மறு­சீ­ர­மைக்­க­வில்லை. பெண்கள் அணி இளைஞர் அணி என்­பன செயற்­தி­ற­னாக செயற்­ப­ட­வில்லை. ஆனால் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ கட்­சியின் தேசிய அமைப்­பா­ள­ராக வந்­த­வுடன் அவர் கட்­சியை கட்­டி­யெ­ழுப்­பினார். பெண்கள் அணி இளைஞர் அணி என்­பன செயற்­தி­ற­னாக செயற்­பட ஆரம்­பித்­தன. கீழ் மட்­டத்தில் கட்சி எழுச்சிபெற ஆரம்பித்தது.

முஸ்லிம்களுக்கு பிரச்சினை

பொது பல சேனா அமைப்பினால் நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி தீர்வுகாணலாம் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :