ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் இருக்கும் துரோகி நச்சுப்பாம்பு யார்..? வீடியோ

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடத்தினருடனான சந்திப்பொன்று அண்மையில் பம்பலப்பிட்டியில் உள்ள கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவரின் நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்றது.

அக்கூட்டத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உரையாடிக்கொண்டிருக்கின்றபோது அதனை ஒலிப்பதிவு செய்து வெளியிட்ட துரோகத்தனமான நச்சுப்பாம்பு ஒன்று கட்சிக்குள் உலாவுவதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.

குறிப்பிட்ட ஒலிப்பதிவு இம்போட்மிரருக்கு கிடைத்தது சம்மந்தமாக கேள்வி எழுப்பியபோதே மேற்குறித்த விடையத்தினை கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்தார்.

கட்சியின் உயர்பீடங்களில் அதிகமாகப் பேசுவோரில் யார் இந்த திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட ஒலிநாடாவில் பேசவில்லையோ அவர்தான் அந்த திருட்டுத்தனமான, துரோகத்தனத்தை செய்திருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை  தலைவர் சுத்தம் செய்ய வேண்டும் உள்ளே ஏராளமான நச்சு வைரசுக்கள் நிறைந்துள்ளன. புலநாய்வுத்துறையினர் கட்சிக்குள் இருக்கிறார்கள், துரோகிகளும், வியாபாரிகளும், இரட்டைவேடம் போடுபவர்களும் கட்சிக்குள் அதிகரித்து விட்டனர். எனவே தலைவர் தத்துணிவுடன் கட்சியில் இருக்கும் இப்படியான நச்சுப்பாம்புகளை இனம்கண்டு தூக்கி வீசவேண்டும் இல்லை என்றால் தலைவருக்கும் கட்சிக்கும் பெரும் ஆபத்தான நிலமை வந்துவிடும் என்று குறிப்பிட்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :