கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய நிருவாக உத்தியோகத்தராக திருமதி பரஞ்சோதி சுந்தரி




யு.எம்.இஸ்ஹாக் -

ல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய நிருவாக உத்தியோகத்தராக திருமதி பரஞ்சோதி சுந்தரி நியமனம் செய்யப் பட்டுள்ளார் .

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்திய சாலையில் நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இவர் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் ஏற்பட்ட நிருவாக உத்தியோகத்தர் வெற்றிடத்துக்கு கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் நியமிக்கப் பட்டுள்ளார் . கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்றிய ஏ.எல். ஜுனைதீன் ஓய்வு பெற்று சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப் பட்டுள்ளார் .

இன்று வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையை பொறுப் பேற்ற புதிய நிருவாக உத்தியோகத்தரை வரவேற்கும் நிகழ்வு கல்முனை வலயக் கல்வி அலுவலக நலன்புரிச் சங்க தலைவர் யு.எம்.இஸ்ஹாக் தலைமையில் இடம் பெற்ற போது வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான ஏ.சி.எம்.தௌபீக்,எஸ்.எல்.அப்துல் ரஹீம் .வீ.மயில் வாகனம் உட்பட உத்தியோகத்தர்கள் பாராட்டி உரையாற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :