தேசிய ஷூறா சபையின் அங்கத்துவ அமைப்புகளுடனான சந்திப்பு :

லங்கை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இயக்கங்கள் சங்கங்களின் கூட்டமைப்பான தேசிய ஷுறா சபை தனது அங்கத்துவ அமைப்புகளுடான சந்திப்பு ஒன்றை அண்மையில் கொழும்பில் நடத்தியது. இவ்வங்கத்துவ அமைப்புகள் தேசிய ரீதியாக செயல்படும் இஸ்லாமிய, சமூக நிறுவனங்களாக இருப்பதுடன் முஸ்லிம் சமூக மேம்பாட்டில் பல்வேறு துறைகளில் பல தசப்தங்களாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அமைப்புகளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.



இச் சந்திப்பில் அங்கத்துவ அமைப்புகளின் செயற்திட்டங்கள், எதிர்கால இலக்குகள் முன்னுரிமைகள் தொடர்பாகவும் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்ககள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் தேசிய ஷூறா சபையும் அங்கத்துவ அமைப்புகளும் இணைந்து செயற்படுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிதல் போன்றவை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இந்த முக்கிய சந்திப்பின் போது ஒவ்வொரு அங்கத்துவ அமைப்பும் தமது கடந்த கால செயற்பாடுகள் தற்போதைய முன்னெடுப்புகள் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக விளக்கங்களை முன்வைத்தன. மேலும் அங்கத்துவ அமைப்புக்கள் வேலைகளை ஒழுங்குபடுத்தி, பகிர்ந்தளித்தல், சமூக, தேச, சகவாழ்வுக்காக தமது வேலைகளை எவ்வாறு திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுத்தல் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.



இந் நிகழ்வில் ஒவ்வொரு அமைப்பினதும் தலைவர், செயலாளர், உட்பட உயர் மட்ட மற்றும் ஆலோசனை சபை குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.




இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் முஸ்லிம் அமைப்புக்கள் தமது வேலை திட்டங்கள் தொடர்பில் இவ்வாறானதொரு கலந்துரையாடலில் கலந்து கொண்டமை இதுவே முதல் தடவையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :