அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டஉள்ளூராட்சி மன்றங்களின் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான செயலமர்வு!

 அஸ்லம் எஸ்.மௌலானா-

ம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவ செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பான இரண்டு நாள் வதிவிட செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது.

ஆசிய மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்று வருகின்ற இந்த செயலமர்வில் ஆசிய மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்,சுதாகரன் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு விரிவுரைகளையும் பயிற்சிகளையும் வழங்கினார்.

இதில் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரிகளான றிஷாத் ஷரீப், எஸ்.சசிகரன் உள்ளிட்ட அதிகாரிகளும் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் எச்,எம்.எம்.ரஷீத் உட்பட மேற்படி உள்ளூராட்சி மன்றங்களின் நிதிப் பிரிவு உத்தியோகத்தர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த செயலமர்வு நாளை புதன்கிழமை மாலை நிறைவுபெறும் என அறிவிக்கப்படுகிறது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :