கல்முனையில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த 11 சாரதிகளுக்கு நிரந்தர நியமனம்




அஸ்லம் எஸ்.மௌலானா-

ல்முனை மாநகர சபையில் நீண்ட காலமாக தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த 11 சாரதிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று (19) புதன்கிழமை கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.ஜெயக்குமார், எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கணக்காளர் எச்.எம்.எம்.ரஷீத், முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் ஆகியோரும் கலந்து கொண்டு குறித்த சாரதிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :