ஜனாதிபதித் தேர்தலில் சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­ தேவை,அரச ஊழி­யர்­கள் பிர­சாரப் பணி­க­ளில் ஈடு­ப­டுத்தக்கூடாது

டுத்த ஜனா­தி­பதித் தேர்தலை நீதி­யாகவும் நியா­ய­மா­ன­து­மாக நடத்துவதற்கான ஆலோ­ச­னை­களை நேற்று தேர்தல் ஆணை­யாளர் மஹிந்­த ­தேசப்பிரி­ய­விடம் ஐ.தே.க. முன் வைத்­தது.

ஜனா­தி­பதி தேர்­தலை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் கொழும்பு பிர­சார காரி­யா­ல­யத்தின் திறப்புவிழாவில் அரச நிறு­வ­னங்­களின் உயர் அதி­கா­ரிகள் பங்­கு­பற்­றி­ய­மையை அடிப்­ப­டை­யாகக் கொண்டே இவ் ஆலோ­ச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டன.

இதற்­க­மைய ஐ.தே.கட்­சியின் தலை­மைத்­துவ சபை தலைவர் கரு ஜெய­சூ­ரிய, பொதுச் செய­லாளர் திஸ்ஸ அத்­த­நா­யக்க, உப தலைவர் ரவி கரு­ணா­நா­யக்க மற்றும் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­ன­ரான ஜோசப் மைக்கல் பெரேரா உள்­ளிட்ட எம்.பி.க்கள் இரா­ஜ­கி­ரி­ய­வி­லுள்ள தேர்தல் செய­ல­கத்தில் வைத்து குறித்த ஆலோ­ச­னை­களை தேர்தல் ஆணை­யா­ள­ரிடம் கைய­ளித்­தனர்.

நடந்து முடிந்த ஊவா மாகாண சபை தேர்­தலில் சட்­ட­விதிமுறை பல­வாறு மீறப்­பட்­ட­மையை அடிப்­ப­டை­யாகக் கொண்டே இந்த யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதித் தேர்­தலை இலக்குவைத்து ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி கொழும்பு பான்ஸ் பிளேஸில் பிர­சாரக் காரி­யா­ல­ய­மொன்றை கடந்த மாதம் 25 ஆம் திகதி திறந்துவைத்­தது.

மேற்­கு­றித்த காரி­யா­லய திறப்புவிழா­வில் மத்­திய வங்கி ஆளுநர் உள்­ளிட்ட 62 அரச நிறு­வ­னங்­களின் உயர் அதி­கா­ரிகள் பங்­கு­பற்­றி­யுள்­ளனர்.

இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்த சந்­தர்ப்­பத்­திலும் அரச ஊழி­யர்­களை தேர்தல் பிர­சாரப் பணி­க­ளில் ஈடு­ப­டுத்தக்கூடாது. அதற்­கான வழி­வ­கை­களை தேர்தல் செய­லகம் எடுக்க வேண்டும்.

அத்­தோடு தேர்தல் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளுக்கும் இட­ம­ளிக்க வேண்டும். மேலும், ஜனா­தி­பதி தேர்தல் பிர­சாரப் பணி­க­ளுக்­காக ஆளும் கட்­சி 45 நாட்கள் கால அவ­காசம் வழங்­கப்­பட வேண்டும்.

மேற்­கு­றித்த ஆலோ­ச­னை­க­ளையே ஐக்­கிய தேசியக் கட்சி முன்­வைத்­துள்­ளது.

இது தொடர்பில் கட்­சியின் பொதுச் செய­லாளர் திஸ்ஸ அத்த நாயக்க ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில்;

ஆளும் கட்­சி­யா­னது ஜனா­தி­பதித் தேர்­தலை இலக்குவைத்து தற்­போதே சட்ட விதி­மு­றை­களை மீறும் செயலில் களமிறங்கியுள்ளது. ஆகவே, இந்த தேர்தல் நீதியானதும் நியாயமானதுமாக இடம்பெறும் என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, குறித்த ஆலோசனைகளை நிறைவேற்ற தேர்தல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :