அசின் விராது தேரரின் இலங்கை விஜயம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமல்ல- ருவான் வணிகசூரிய

மியன்­மாரின் மதத் தலைவர் அசின் விராது தேரரின் இலங்கை விஜயம் நாட்டின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான விட­ய­மல்ல. இலங்­கைக்குள் குழப்­பங்கள் ஏற்­படும் வாய்ப்­புக்கள் இல்­லை­யென தெரி­வித்த இராணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய தெளஹித் ஜமாஅத் அமைப்­பிற்கு இலங்கை வர அனு­மதி உண்­டெனின் விராது தேரர் ஏன் வரக்­கூ­டாது எனவும் கேள்வி எழுப்­பினார்.

மியன்­மாரின் 969 அமைப்பின் தலைவர் அசின் விராது தேரரின் இலங்கை விஜயம் நாட்டின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லா­னதா என்று வின­விய போதே பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்; மியன்­மாரின் 969 அமைப்பின் தலைவர் அசின் விராது தேரரோ அல்­லது அவ் அமைப்போ தீவி­ர­வாத அமைப்­பல்ல. அதேபோல் 969 என்­பது பௌத்த சிந்­த­னை­க­ளையும் பௌத்த கொள்­கை­க­ளையும் அடை­யா­ள­மாகக் கொண்ட அமைப்­பாகும். எனவே, இவர்­களின் வருகை இலங்­கையின் பாது­காப்பில் அச்­சுறுத்தல் அல்­லது சிறு­பான்மை மக்கள் மீதான அச்­சத்­தினை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­தொன்­றல்ல. அத்­தோடு அஹிம்சை வழி­யி­லேயே அவரின் செயற்­பா­டுகள் அனைத்தும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றான பௌத்த தலை­வர்­களை இலங்­கைக்கு அழைத்­தி­ருப்­பது நாட்­டிற்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யாது.

மேற்­கத்­தேய ஊட­கங்கள் இது­வ­ரையும் இவ் 969 அமைப்­பி­னையும் தீவி­ர­வாத அமைப்­பாக சித்­த­ிரிக்­கின்­றனர். ஆயினும் மேற்குலக ஊட­கங்­களின் பின்­ன­ணியில் யார் செயற்­ப­டு­கின்­றனர் என்­ப­தையும் இவர்­களின் நோக்கம் எது என்­ப­த­னையும் நாம் அறிந்­துள்­ளதே. எனவே, இவ்­வி­மர்­ச­னங்­களை கருத்திற் கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை. மியன்­மாரில் பௌத்த மதத்­திற்கு எதி­ரான வகையில் ஒரு சில முஸ்லிம் அமைப்­புகள் செயற்­பட்ட போது அதனை தடுக்கும் வகையில் செயற்­பட்ட அமைப்பே தவிர சாதா­ரண முஸ்­லிம்­களை இவர்கள் எதிர்க்­க­வில்லை என்­பதே உண்மை.

மேலும், தென் இந்­தி­யாவின் அமைப்­பாக செயற்­படும் தௌஹித் ஜமா அத் அமைப்பின் பிர­தி­நிதி கடந்த வாரம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டி­ருந்தார். அதேபோல் தௌஹித் ஜமா அத் அமைப்­பினர் பள்ளி வாசல்­க­ளிலும் ஏனைய பகு­தி­க­ளிலும் மத பிர­சா­ரங்­களை செய்­கின்­றனர். எனவே, இவை அனைத்து செயற்­பா­டு­க­ளுக்கும் இலங்கை அரசு இட­ம­ளித்­தி­ருக்­கின்­றது. தௌஹித் ஜமா அத் அமைப்பு என்­பது பிரி­வி­னை­வாத அமைப்­பென்­பதை அனை­வரும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அவர்கள் இலங்கை வரமுடியுமெனின் ஏன் மியன்மாரின் மதத் தலைவர் அசின் விராது தேரர் இங்கு வரக்கூடாது. அசின் விராது தேரர் இங்கு வர கூடிய உரிமைகளும் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
வீ.கே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :