இந்தியாவை சுத்தமாக்கப்புறப்பட்ட பிரதமர் மோடி -சுத்தமான இந்தியா’

’சுத்தமான இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்த அமைப்பில் இணைய சச்சின் டெண்டுல்கர், கமல்ஹாசன் உள்பட 9 பேருக்கு அழைப்பு விடுத்தார்

டெல்லியில் இன்று 'சுத்தமான இந்தியா' திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், சுத்தமான இந்தியா உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற 9 பேருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். மிருதுளா சின்கா ஜி, சச்சின் டெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல்ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான்கான், அனில் அம்பானி ஆகியோருக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் மேலும், 9 பேருக்கு அழைப்பு விடுக்க கேட்டுக் கொண்டுள்ளேன்.

சுத்தமான இந்தியாவை உருவாக்குவது என்பது இந்திய மக்களின் பொறுப்பு. இது அமைச்சர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பொறுப்பு மட்டும் இல்லை. இது பொதுமக்களுடைய பொறுப்பும் கூட. இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கம் நாடு முழுவதும் வெற்றி கண்டது. அதேபோல் இந்தியாவை சுத்தம் செய்வோம் என்று இயக்கத்தில் 125 கோடி மக்களும் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மகாத்மா காந்தியின் கொள்கைகளை நம்புங்கள். சமூக வலைதள பக்கத்தில் ‘சுத்தமான இந்தியா’ இயக்க பிரசாரத்திற்கான உற்சாகம் மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம் என்று உறுதியளிக்க வேண்டும். நாம் வெளிநாடு செல்லும் போது அந்த நாடுகள் எப்படி சுத்தமாக இருக்கிறது என்று பார்க்கிறோம். மக்கள் கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, கழிவு பொருட்களை கண்ட இடங்களில் வீசுவதை நாம் அங்கு பார்க்கவில்லை. எனவே தான் அங்கு சுத்தமாக உள்ளது" என்றார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்றார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா

இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த சவாலை இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஏற்றுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் இந்த திட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் இணையதளத்தில், நான் தாழ்மையுடன் மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடிஜியின் சவாலை ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனது ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள பிரியங்கா சோப்ரா, சுத்தமான இந்தியா திட்டத்தில் ஈடுபடவில்லை என்றாலும், ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் ஒன்றும் நடக்காது. ஆனால் நாம் ஒன்றாக இணைந்து பணிசெய்தால் மாற்றத்தை கொண்டுவர முடியும். நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் முக்கியமானதாக இருக்க வேண்டும். நான் மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறேன். நான் இந்தியாவை சுத்தப்படுத்த விரும்புகிறேன். இது சுத்தம் செய்யும் நேரம் என்று கூறியுள்ளார்.
<விகடன்>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :