ஜனா­தி­பதி தேர்தல் முதலில் நடத்­தப்­ப­டாது பொதுத் தேர்தல் நடத்­தப்­ப­டு­வ­தை விரும்பும்- முஸ்லிம் காங்கிரஸ்

னா­தி­பதி தேர்தல் முதலில் நடத்­தப்­ப­டாது பொதுத் தேர்தல் நடத்­தப்­ப­டு­வ­தையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் விரும்­பு­வ­தாக கருத்து வெளி­யிட்ட நீதி­ய­மைச்­சரும் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான ரவூப் ­ஹக்கீம் தனது கட்சி ஏனைய அர­சியல் கட்­சி­க­ளு­டனும் இறு­தியில் ஆளும் கட்­சி­யு­டனும் சம­கால அர­சியல் பிரச்­சி­னைகள் உட்­பட சில முக்­கிய விட­யங்கள் பற்றி கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக தெரி­வித்தார்.

இன்­றைய பாரா­ளு­மன்றம் வாக்­க­ளித்த மக்­களின் அபி­லா­சை­களைப் பிர­தி­ப­லிக்­க­வில்­லை­யெ­னவும் கடந்த தேர்­தலில் ஐ.தே.க. உட்­பட ஏனைய கட்­சி­களின் சார்பில் போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்­டிய பின்னர் ஆளும் கட்­சியில் இணைந்து கொண்­ட­வர்­களின் எண்­ணிக்­கையே அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. இது மக்­களின் உண்­மை­யான ஆணையைப் பிர­தி­ப­லிக்­க­வில்லை எனவும் அவர் கூறினார்.

அமைச்சர் ஹக்கீம் கேச­ரிக்கு தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஐ.தே. கட்­சி­யி­லி­ருந்து ஆளும் கட்­சி­யுடன் சேரு­வ­தற்கு நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது. அத­னா­லேயே கட்சி மாறி­யது. ஐ.தே. கட்­சி­யுடன் முஸ்லிம் காங்­கிரஸ் ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்த புரிந்­து­ணர்வு கொள்கை அடிப்­ப­டையில் இது நடை­பெற்­றது.

சம­கால அர­சியல் மற்றும் முக்­கிய விட­யங்கள் தொடர்பில் முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சிக்குள் கலந்­து­ரை­யா­டல்­களை நடாத்­த­வுள்­ளது. அடுத்த வாரம் கொழும்புஇ கம்­பஹாஇ களுத்­துறை மற்றும் மாத்­தறை ஆகிய நான்கு மாவட்­டங்­களைச் சேர்ந்த மாகாண சபை தேர்­தலில் போட்­டி­யிட்ட முஸ்லிம் காங்­கிரஸ் அபேட்­ச­கர்கள் கொழும்­புக்கு அழைக்­கப்­பட்டு கலந்­து­ரை­யாடல் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

ஏனைய அர­சியல் கட்­சி­க­ளு­டனும் முஸ்லிம் காங்­கி­ரஸின் முக்­கி­யஸ்­தர்­க­ளு­டனும் சம­கால அர­சியல் நிலைமை பற்றி கலந்­து­ரை­யாடி பெற்றுக் கொள்­ளப்­படும் தக­வல்­களை மைய­மாகக் கொண்டு ஆளும் தரப்­புடன் இறு­திக்­கட்ட பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும் என்றார். பாரா­ளு­மன்ற தேர்­தலே முதலில் நடாத்தப்பட வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடாக உள்ளது என்றார். கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலியும் அமைச்சரின் கருத்தினை உறுதி செய்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :