நெற்செய்கையை தொடர்ந்தும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

ஸிறாஜ் ஏ.மனீஹா-

க்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலை விவசாயக் கண்டத்தில் 1250 ஏக்கர் காணியில் பல வருடங்களாக மேற்கொண்டுவரும் நெற்செய்கையை தொடர்ந்தும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்ணனிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இது தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னணிகளின் தேசிய உப தலைவரும் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளருமான எம்.ஐ. உதுமாலெவ்வையினால் ஒப்பமிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

சுமார் 500 விவசாயக் குடும்பங்கள் 1250 ஏக்கர் காணியில் இந் நொரைச்சோலை பிரதேசத்தில் பல வருடங்களாக நெற் செய்கை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது சீனிக்கூட்டுத் தாபனத்தினால் கரும்புச்செய்கை பண்ணுமாறு பலவந்தமாக அறிவிக்கப்பட்டள்ளது. இவ்விவசாயிகள் அனைவரும் தொடர்ந்தும் இக்காணிகளில் விவசாயம் (நெற்செய்கை) மேற்கொள்ளவே விரும்புகின்றனர்.

எனவே அதிமேதகு ஜனாதிபதியான நீங்கள் இது விடயமாக நடவடிக்கை எடுத்து இவ் ஏழை விவசாயக் குடும்பங்களினது நன்மை கருதி இக்காணியில் நெற்செய்கை மேற்கொள்ள உதவுமாறு அம்மகஜரில் கேட்கப்பட்டுள்ளது.

இது விடயமாக அமைச்சர்களான ரஊப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாஉல்லா, றிசாத் பதியுதீன், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோருக்கு முறைப்பாடு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென அம்மகஜரில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :