எம்.ஜே.எம். முஜாஹித்-
உலக அஞ்சல் தினத்தையொட்டி தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள தேசிய விழா எதிர்வரும் வியாழக்கிழமை (09) யாழ்ப்பாணம் செல்வா அரங்கில் அஞ்சல் மாஅதிபர் டி.எல்.பி.ஆர் அபயரட்ன தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த அஞ்சல், உப அஞ்சல் அதிபர், சிறந்த அலுவலர்;கள், சிறந்த சிற்றூழியர்கள் ஆகியோர் இவ்வைபவத்தில் கௌரவிக்கப்படவுள்ளனர்.
அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
0 comments :
Post a Comment