தேசிய அஞ்சல் தின நிகழ்வு

எம்.ஜே.எம். முஜாஹித்-

லக அஞ்சல் தினத்தையொட்டி தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள தேசிய விழா  எதிர்வரும் வியாழக்கிழமை (09) யாழ்ப்பாணம் செல்வா அரங்கில் அஞ்சல் மாஅதிபர் டி.எல்.பி.ஆர் அபயரட்ன தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க கலந்து  சிறப்பிக்கவுள்ளார்.

இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த அஞ்சல், உப அஞ்சல் அதிபர், சிறந்த அலுவலர்;கள், சிறந்த சிற்றூழியர்கள் ஆகியோர் இவ்வைபவத்தில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில்  வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :