கல்லடி பாலத்தின் கீழுள்ள வாவியில் குதித்த காதலர்கள்

முஸ்ஸம்-
ட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழுள்ள வாவியில் குதித்த காதலர்கள் இருவரில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 9.00 மணியளவில் கரடியனாறினை சேர்ந்த ஆணும் பெண்ணுமே இவ்வாறு பாலத்திலிருந்து பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

குடும்ப பிரச்சினைகள் காரணமாகவே தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தர்மலிங்கம் ராஜா (31) தற்போது இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உயிருடன் மீட்கப்பட்டவர் ஞானசெல்வம் வினோ (27) என்ற பெண், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :