நிந்தவூர் அஸ்-ஸபாவில் 5 ஆண்டு புலமை பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு.




ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் ' 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும்' திட்டத்தின் கீழ், நிந்தவூர் அஸ்-ஸபா வித்தியாலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இடம் பெற்றது.

வித்தியாலய அதிபர் எஸ்.எம்.காதர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு,மாணவர்களைக் கௌரவித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை வலய கல்விக் காரியாலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹமீட், பல்கலைக் கழக விரிவுரையாளர் எம்.ஏ.ஹலீம், எம்.சி.எம்.ஹாறூன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டார்.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு மாலை அணிவித்து, சான்றிதழ்கள், பரிசுப் பொருட்கள், நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன இங்கு பேசுகையில்:- ' நாம் எல்லோரும் விமர்சிக்கும் அரசியலை விட்டு விட்டு, அபிவிருத்தி அரசியலுக்கு வர வேண்டும். மாணவர்களே கல்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை. அரசியல் இல்லாமல் அபிவிருத்தி இல்லை. நான் இங்கே அரசியலை ஏன் பேசுகிறேன் என்றால்? உங்களில் அதிகமானோர் எதிர்காலத்தில் நல்ல அரசியல் தலைவர்களாக வர உள்ளீர்கள். சமூகத்திலுள்ள பல மட்டங்களிலும் தலைவர்களாக வரக் கூடிய பாங்கு உங்களிடத்தில் காணப்படுகின்றது. எனவே, நீங்கள் நல்ல கல்வியின் மூலம் அதனை அடைந்து கொள்ளப் பிரார்த்திக்கின்றேன்' எனத் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :