குடிபோதையில் கலாட்டாப் பன்னியவர்களுக்கு 15 நாட்களுக்கு சமூக சேவையில் ஈடுபடுமாறு நீதிமன்றம் உத்தரவு

பி. முஹாஜிரீன் -

லுவில் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் குடிபோதையில் பொது இடங்களில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு நபர்களுக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதி மன்றத்தினால் 15 நாட்களுக்கு சமூக சேவையில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸாரால் இவர்கள் இன்று (03) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும், மேலதிக நீதவானுமாகிய ஏ.எச்.எம். பசீல் முன்னிலையில் இன்று (03) வெள்ளிக்கிழமை ஆஜர் செய்தபோது இரு நபர்களும் 15 நாட்களுக்கு சமூக சேவையில் ஈடபடுத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :