கொழும்பு- கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் களனி மேம்பாலத்தின் ஊடாக, கொழும்புக்குள் வாகனங்கள் நுழைவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வார நாட்களில் காலை 7 மணிமுதல் காலை 9 மணிவரை இரண்டு மணித்தியாலயத்துக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என்றும் சனி, ஞாயிறு மற்றும் போயா ஆகிய தினங்களில் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மேற்குறிப்பட்ட நேரத்தில் வார நாட்களில் ஏற்படும் வாகன நெரிசலை கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமை அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment