இயற்கை வளமுள்ள குளங்களையும் அபிவிருத்தி செய்து அழகுப்படுத்தி வருகின்றோம்-அமைச்சர் உதுமாலெப்பை

சலீம் றமீஸ்-

மிக நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமலிருக்கும் இறக்காமம் குளம் மிக  விரைவில் அபிவிருத்தி செய்யப்பட்டு அதன் கரையோரங்கள் அழகு படுத்தப்படும். கிழக்கு  மாகாணத்திலுள்ள நீர்ப்பாசன திட்டங்களை அபிவிருத்தி செய்து வருகின்ற இவ்வேளையில் இயற்கை  வளமுள்ள குளங்களையும் அபிவிருத்தி செய்து அழகுப்படுத்தி வருகின்றோம் என கிழக்கு மாகாண  வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பு நிர்மாணமும், கிராமிய மின்சாரம்  மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளரும்,  தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான தேசகீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை  தெரிவித்தார்.

இறக்காமம் குளம் அபிவிருத்தி செய்து அதன் மூலமாக இறக்காமம், வரிப்பத்தான்  சேனை நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி  கொடுப்பதுடன், இப்பிரதேசத்திலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த இந்த குளத்தினை அழகு படுத்தல்  தொடர்பான கூட்டம் இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. 

இதில் பிரதம் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் இடம்  பெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் யு.கே.ஜாபீர், மத்திய  நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.ஐ.எம்.இஸட்.இப்றாஹீம், திவிநெகும முகாமையாளர் யு.எல்.ஜூனைதீன் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து 
கொண்டனர்.

மேற்படி கூட்டம் முடிவுற்றதன் பின்னர் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களுடைய  தலைமையிலான உயர் அதிகாரிகள் இறக்காமம் குளத்தை நேரடியாக சென்று பார்வையிட்டனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :