தவிசாளர் அன்சில் கலந்து கொண்ட கல்முனை மிஸ்பாஹ் வித்தியாலய தலைவர் தின நிகழ்வு






எஸ்.எம்.எம்.றம்ஸான் -

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 14 வது நினைவு தினத்தை முன்னிட்டு, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் பல இன்று கல்முனை வலயப் பாடசாலைகளில் இடம்பெற்றன.

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் யு.எல்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் பிரதம அதிதியாகவும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா விஷேட அதிதியாக கலந்து கொண்டதுடன் துஆ பிரார்த்தனை, ஞாபகார்த்த பேருரை மற்றும் மர நடுகை என்பனவும் இடம்பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :