நாட்டின் அதி உன்னத நிர்வாக பீடத்தில் இருக்கும் 94 பேர் O/L பரீட்சை எழுதாதவர்கள்-அதிர்சித் தகவல்

நாட்டின் அதி உன்னத நிர்வாக பீடமாகக் கருதப்படும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 94 உறுப்பினர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாதவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் 225 பேர் அங்கம் வகிக்கின்றோம். இதில் 94 பேர் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் சித்தியெய்த தகுதியில்லாதவர்களாக இருக்கின்றார்கள்.

மேலும் 142 பேருக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்த தகுதியில்லாதவர்களாக இருக்கின்றார்கள்.

சாதாரண தரம், உயர்தரம் ஆகியன ஒருவரின் புத்தி கூர்மையை மதிப்பீடு செய்யும் ஒரே அளவுகோல் அல்ல என்ற போதிலும், யதார்த்தத்தில் உயர்தர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்களே இருக்கின்றார்கள்.

இவ்வாறானவர்களே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தீர்மானங்களை எடுக்கின்றார்கள்.

இன்று முகநூல் ஓர் முக்கியமான தொடர்பாடல் சாதனமாக மாற்றமடைந்துள்ளது.

இதில் இலங்கை அரசியல்வாதிகள் தொடர்பில் வெளியாகும் கருத்துக்களே அரசியல்வாதிகளின் நிலைமை குறித்து அறிந்து கொள்ள போதுமானது.

அரசியல்வாதி என்றாலே கொள்ளை, கொலை, பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர் என்ற ஓர் பிழையான நிலைப்பாடு மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.

நீலம், சிகப்பு நிற அரசாங்கங்களுக்கு பதிலாக பச்சை அரசாங்கமொன்று வந்தாலும் இந்த நிலைமையை மாற்ற முடியாது.

ஏனெனில், பச்சை அரசாங்கம் வந்தாலும் மோசமான அரசியல்வாதிகள் இதில் வந்து இணைந்து கொள்வார்கள்.

கட்சி மாறும் அரசியலில் ஈடுபட்டவர்கள் வரலாற்று காலம் முதல் மிக மோசமான விளைவுகளை சந்தித்துள்ளனர்.

நாட்டின் அரசியல் பொறிமுறைமையில் அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :