கூட்­ட­மைப்­பாக போட்­டி­யி­டு­வதா இல்லை தனித்து போட்­டி­யி­டு­வதா இன்று முடிவு - முஸ்லிம் காங்கிரஸ்

வா மாகா­ண­சபைத் தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஏனைய முஸ்லிம் கட்­சி­களுடன் இணைந்து கூட்­ட­மைப்­பாகபோட்­டி­யி­டு­வதா இல்லை தனித்து போட்­டி­யி­டு­வதா என்­பது குறித்து இன்று இறுதி முடி­வெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதற்­கான மு.காவின் உயர்­மட்­டக்­குழு கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நீதி அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தலை­மையில் பிற்­பகல் 4.30மணிக்கு தாரு­ஸ­லாமில் நடை­பெ­ற­வுள்­ளது.

இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் ஹசன் அலி தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

நாம் அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளாக இருந்­தாலும் முஸ்லிம் சமூ­கத்தின் தேசிய கட்சி என்ற அடிப்­ப­டையில் கடந்த தேர்­தல்­களில் தனித்தே போட்­டி­யிட்­டி­ருந்தோம். அதே­போன்று இந்த ஊவா மாகா­ண­சபைத் தேர்­த­லிலும் தனித்தே போட்­டி­யி­டு­வ­தாக தீர்­மா­னித்­தி­ருந்தோம்.

அவ்­வா­றான நிலையில் தற்­போது சில முஸ்லிம் கட்­சி­க­ளுடன் இணைந்து முஸ்லிம் கூட்­ட­மைப்­பாக போட்­டி­யிட வேண்டும் என்ற கோரிக்­கைகள் கட்­சியின் உயர் மட்­டத்­திடம் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆகவே கட்சிப் போர­ளி­களின் கருத்­துக்­களை உள்­வாங்­கிய நாம் அது குறித்து ஆராய்ந்து இன்­றைய தினம் நடை­பெ­ற­வுள்ள உயர்­மட்­டக்­குழுக் கூட்­டத்தில் இறுதி முடி­வொ­டுக்­க­வுள்ளோம்.

எவ்­வ­ரா­றா­யினும் நாட்டில் தொடர்ச்­சி­யாக முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்கு முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வங்கள் பாது­காக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவசியம். அதனடிப்படையில் ஊவாவிலும் மு.கா தனது பேரம்பேசும் சக்தியுடன் பிரதிநிதித்துவங்ளை தக்க வைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :