ஜெய­ல­லிதாவிடம் மண்ணிப்பு கோரிய இலங்கை

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியான கட்டுரையினால் பெரும் சர்ச்சை

மி­ழக முத­ல­மைச்சர் செல்வி ஜெய­ல­லி­தாவை அவ­தூ­றுக்கு உட்­ப­டுத்தும் வகையில் இலங்கை பாது­காப்பு அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்த­ளத்தில் வெளி­யி­டப்­பட்ட கட்­டுரை பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.இந்த கட்­டு­ரையை வெளி­யிட்­ட­மைக்­காக இலங்கை அர­சாங்கம் நிபந்­த­னை­யற்ற மன்­னிப்பு கோர­வேண்­டு­மென இந்­திய மத்­திய அர­சாங்கம் வலி­யு­றுத்த வேண்டும் என்று தமி­ழக முத­ல­மைச்சர் செல்வி ஜெய­ல­லிதா இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

தமி­ழக முத­ல­மைச்சர் ஜெய­ல­லி­தாவை அவ­தூ­றுக்கு உட்­ப­டுத்தும் வகையில் வெளி­யி­டப்­பட்ட கட்­டு­ரைக்கு தமி­ழ­கத்தில் கடும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­ட­துடன் பாரா­ளு­மன்­றத்­திலும் இந்த விவ­காரம் எதிர்­ஒ­லித்­துள்­ளது. இத­னை­ய­டுத்து இலங்கை அர­சாங்கம் நிபந்­த­னை­யற்ற மன்­னிப்பை கோரி­யுள்­ளது. பாது­காப்பு அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் நேற்று வெளி­யான கட்­டு­ரையில்,

"சர்­வ­தேச எல்­லையை கடந்து வந்து இலங்கை எல்­லைக்குள் தமி­ழக மீன­வர்கள் மீன்­பி­டிப்­ப­தா­லேயே அவர்கள் மீது இலங்கை கடற்­படை நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது.
சர்­வ­தேச அளவில் தடை செய்­யப்­பட்ட பட­குகள் மற்றும் வலை­களை பயன்­ப­டுத்தி மீன் பிடித்­ததால் தமி­ழக கடல் பகு­தியில் மீன்­வளம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­காக எல்லை தாண்டி வந்து அடுத்த நாட்டின் மீன்­களை கொள்­ளை­ய­டித்துச் செல்­வது எந்த வகையில் நியா­ய­மா­ன­தாகும்.
தமி­ழக மீன­வர்கள், தடை செய்­யப்­பட்ட பட­குகள் மூலம் இலங்கை எல்­லைக்குள் வரு­வதால் இலங்­கையின் மீன்­வ­ளமும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.
இலங்­கைக்கு வருவாய் இழப்பும் ஏற்­பட்­டுள்­ளது. அவர்கள் நலனை மட்­டுமே கருதும் தமி­ழக மீன­வர்கள், இலங்­கையில் உள்ள தமிழ் மீன­வர்­களின் நலனை நினைத்து பார்ப்­ப­தில்லை.

இந்த உண்­மை­களை புரிந்து கொள்­ளாமல் தமி­ழக மீன­வர்கள் இலங்கை கடற்­ப­டை­யி­னரால் கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என பிர­தமர் மோடிக்கு, தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா தொடர்ந்து கடிதம் எழுதி வரு­கிறார்.
ஒரு­வேளை அந்த பட­குகள் ஜெய­ல­லி­தா­விற்கும், அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் சொந்­த­மா­ன­தாக இருக்­குமோ? 1876ம் ஆண்­டி­லி­ருந்தே கச்­ச­தீவு இலங்­கைக்கு தான் சொந்தம். இதை ஆங்­கி­லேய அரசே ஏற்றுக் கொண்­டுள்­ளது.

இருப்­பினும், 1924ம் ஆண்டு முதல் கச்­ச­தீவு தங்­க­ளுக்கு தான் சொந்தம் எனக்­கூறி தமி­ழக அரசு அதனை திரும்பப் பெற பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது. பிர­த­ம­ருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி, இலங்கை மீது நட­வ­டிக்கை எடுக்கச் செய்ய ஜெய­ல­லிதா நினைக்­கிறார்.
ஆனால் ஜெய­ல­லி­தாவின் தாளங்­க­ளுக்கு தலை­யாட்டி மோடி அரசு நடனம் ஆடாது. இலங்கை உள்­ளிட்ட அனைத்து நாடு­க­ளு­டனும் நல்­லு­ற­வையே தமது அரசு விரும்­பு­வ­தாக மோடி ஏற்­க­னவே திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்ளார்.
ஜெய­ல­லி­தாவின் தவ­றான புரி­தலின் பேரி­லான கடி­தத்­திற்கு செவி சாய்த்து இலங்கை மீது நட­வ­டிக்கை எடுக்க பிர­தமர் மோடி நினைத்தால், அது சரி­யா­னது அல்ல என்று கூறப்­பட்­டுள்­ளது.

ஜெய­ல­லிதா கடிதம்

இதே­வேளை இலங்கை பாது­காப்பு அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் அவ­தூ­றாக கட்­டுரை வெளி­யிட்­ட­தற்­காக இலங்கை அரசு நிபந்­த­னை­யற்ற மன்­னிப்பு கேட்­க­வேண்­டு­மென்று இந்­திய மத்­திய அரசு வலி­யு­றுத்த வேண்டும் என தெரி­வித்து தமி­ழக முத­ல­மைச்சர் ஜெய­ல­லிதா நேற்று இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடிக்கு கடிதம் எழு­தி­யுள்ளார்.
அந்தக் கடி­தத்தில் அவ­தூ­றான கட்­டு­ரையை வெளி­யிட்­ட­தற்­காக நிபந்­த­னை­யற்ற மன்­னிப்பு கேட்க இலங்­கையை மத்­திய அரசு வலி­யு­றுத்த வேண்டும். மக்கள் பிர­தி­நி­தி­களை இழி­வு­ப­டுத்தும் வகையில் அக்­கட்­டுரை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்­தி­யாவின் அதி­ருப்­தியை மத்­திய அரசு தெரி­விக்­க­வேண்டும்'' என்று வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

மன்­னிப்பு கோரி­யது இலங்கை
தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தாவைப் பற்றி சர்ச்­சைக்­கு­ரிய வகையில் கட்­டு­ரையை வெளி­யிட்­ட­தற்­காக இலங்கை அரசு நிபந்­த­னை­யற்ற மன்­னிப்பை கோரி­யுள்­ளது.
இது­கு­றித்து இலங்கை பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் உத்­தி­யோ­கப்­பூர்வ இணை­யத்­த­ளத்தில் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் புகைப்­ப­டத்­துடன் நேற்று வெளி­யி­டப்­பட்ட செய்­தியில்,

“சர்ச்­சைக்­கு­ரிய கட்­டுரை மற்றும் படம் உரிய அதி­கா­ரி­களின் அனு­ம­தி­யின்றி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
அந்த கட்­டுரை இலங்கை அரசு அல்­லது பாது­காப்­புத்­து­றையின் நிலையை பிர­தி­ப­லிக்­க­வில்லை. அந்த கட்­டுரை இப்­போது நீக்­கப்­பட்­டு­விட்­டது. இந்த கட்­டுரை வெளி­யா­ன­தற்­காக இந்­திய பிர­தமர் மற்றும் தமி­ழக முதல்­வ­ரிடம் நிபந்­த­னை­யற்ற மன்­னிப்பைக் கோரு­கிறோம்” என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த விடயம் தொடர்பில் இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரி­ய­விடம் வின­வி­ய­போது
பாது­காப்பு அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் தமி­ழக முத­ல­மைச்சர் ஜெய­ல­லிதா குறித்து வெ ளியான கட்­டுரை தொடர்பில் நாம் மன்­னிப்புக் கோரி­யுள்ளோம்.
எமது பக்­கத்தில் தவறு நடந்­துள்­ளது. இந்தக் கட்­டு­ரை­யையும் நீக்­கி­விட்டோம். நிபந்­த­னை­யற்ற மன்­னிப்பைக் கோரு­கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :