எனக்கு இந்த ஆணைக் குழுவில் நம்­பிக்­கை­யில்லை. விசா­ர­ணையில் மன்னார் ஆயர் எடுத்­து­ரைப்­பு

னக்கு இந்த ஆணைக் குழுவில் நம்­பிக்­கை­யில்லை. இது அர­சாங்­கத்தின் வற்­பு­றுத்­தலின் பெயரில் நடை­பெறும் கண்­து­டைப்பு வேலையாகும். எனவே இத்­த­கைய ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு நான் விரும்­ப­வில்லை. பதி­லாக ஓர் அறிக்­கையை மாத்­திரம் உங்­க­ளிடம் சமர்ப்­பிக்­கிறேன் என்று காணா­மல்­போனோர் தொடர்­பான விசா­ரணை நடத்தும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இரா­யப்பு ஜோசப் ஆண்­டகை தெரி­வித்­துள்­ளார்.

ஆணைக் குழுவின் ஆறா­வது அமர்வு மன்­னாரில் நேற்று மூன்­றா­வது நாளாக மன்னார் பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்­ற­து. இதன்­போது ஆய­ருக்கும் சாட்­சி­ய­ம­ளிக்க அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன்­படி நேற்று முற்­பகல் 10.30 மணிக்கு மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இரா­யப்பு ஜோசப் ஆண்­ட­கையும் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அன்­ரனி விக்டர் சோசை அடி­க­ளாரும் ஆணைக்­கு­ழுவின் முன் சமு­க­ம­ளித்­தனர்.

ஆணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளிக்க ஆயர் அழைக்­கப்­பட்டார். அந்த நேரம் அவர் 7 பக்­கங்கள் கொண்ட மனு ஒன்றை ஆணைக்­கு­ழு­விடம்

சமர்ப்­பித்து அதனை ஆணைக்­குழு முன் வாசித்­துக்­காட்­டினார். அந்த மனுவில் முதல் இரண்டு பக்­கங்கள் ஆணைக் குழு­வுக்கு தெரி­விக்கும் கருத்­துக்­க­ளையும், ஏனைய பக்­கங்கள் ஏற்­க­னவே ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்ட 14 அம்சக் கோரிக்­கை­களும் அடங்­கி­யி­ருந்­தன.

சுமார் 45 நிமி­டங்கள் ஆணைக்­குழு முன் அவர் விளக்­க­ம­ளித்தார். இதனைத் தொடர்ந்து ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஆய­ருக்கு விளக்­க­ம­ளித்தார்.

அதில், இந்த ஆணைக்­குழு காணா­மற்­போ­ன­வர்கள் சம்­பந்­த­மா­கவே விசா­ர­ணை­களை மேற்­கொள்ள கூடி­யி­ருக்­கி­றது. வரை­ய­றுக்­கப்­பட்ட தன்­மையில் நாம் இருப்­பதால் அதற்கு அப்பால் நாங்கள் செயற்­பட முடி­யாது. ஆகவே காணா­மற்­போ­ன­வர்கள் தொடர்­பாக தங்­களால் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டால் அவற்றை ஏற்று நாங்கள் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்வோம். - என்றார்.

சாட்­சியம் அளித்­ததன் பின்னர் ஆயர் ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­வித்தார். அவர் தெரி­வித்த கருத்­துக்கள் வரு­மாறு:- 

இலங்­கையில் காலத்­துக்கு காலம் பல ஆணைக் குழுக்கள் உரு­வாக்­கப்­பட்டு அவை சாட்­சி­யங்­களை பதிவு செய்­தி­ருந்­தன. ஆனால் இவற்­றின்­மூலம் தமிழ் மக்­க­ளுக்கு பலன் எதுவும் இது­வ­ரையில் கிடைக்­க­வில்லை. 

இந்த ஆணைக்­கு­ழுவும் அர­சாங்­கத்­தினால் கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்டு ஏற்­ப­டுத்­தப்­பட்­டதே. நீங்கள் சாட்­சி­யங்­களை பதிவு செய்யும் முறையை நாம் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. 

மக்கள் தங்­க­ளது ஆதங்­கங்­களை வெளிப்­ப­டுத்த உங்கள் ஆணைக்­கு­ழுவை ஒரு கள­மாக பயன்­ப­டுத்­து­கின்­றனர் என்று மட்­டுமே உண­ர­மு­டி­கி­றது. ஓர் உதா­ர­ணத்தை மட்டும் நான் சொல்ல விரும்­பு­கின்றேன். 

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கௌரவ ஜனா­தி­பதி அவர்கள், கொழும்பு அதி­மே­தகு கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை ஊடாக எனக்கு செய்தி ஒன்றை அனுப்பி வைத்­தி­ருந்தார். உங்கள் ஆதங்­கங்­களை வரி­சைப்­ப­டுத்தி தனக்கு அனுப்­பி­வை­யுங்கள் என்று அதில் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். நானும் எனது ஆதங்­கங்­களை கர்­தினால் ஊடாக தெரி­வித்தேன்.

அதன் பிற்­பாடு கொழும்பு மறை மாவட்ட பேரா­யரின் இல்­லத்தில் இடம்­பெற்ற விசேட கூட்டம் ஒன்­றுக்கு, ஜனா­தி­பதி அவ­ரது செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகி­யோரை அனுப்­பி­வைத்­தி­ருந்தார். அந்தக் கூட்­டத்தில் ஏற்­க­னவே நான் கொடுத்த 14 விட­யங்கள் தொடர்பில் அவர்கள் எந்தப் பதிலும் கூற­வில்லை. 

எல்­லா­வற்­றுக்கும் ஆதாரம் தேவை என்­றனர். ஒவ்­வொன்­றுக்கும் தர­வுகள் தேவை என்று சொல்­கி­றீர்கள். மக்கள் மத்­தியில் நான் சென்று பேச முடி­யாத நிலையே வடக்கு, கிழக்கில் ஏற்­பட்­டுள்­ளது. சி.ஐ.டி மற்றும் ஏனைய கண்­கா­ணிப்­பா­ளர்­களும் மக்­க­ளிடம் சென்று ஆயர் என்ன பேசினார் என்று கேட்­பார்கள். அதனை சென்னால் மக்­க­ளுக்கு நெருக்­கடி கொடுப்­பார்கள், காணாமல் போகச் செய்­வார்கள்.

 எனவே நான் மக்­களை துன்­பப்­ப­டுத்த விரும்­ப­வில்லை. துன்­பத்­துக்கு இட்­டுச்­செல்­வ­தையும் நான் விரும்­ப­வில்லை. நீங்கள் தேடுங்கள் தர­வு­களை. எங்­கெங்கு சரி­யான தகவல் இருக்­கி­றது, தேடினால் கிடைக்கும் என்­பதை நான் சொல்­கிறேன் என்று அவர்­க­ளுக்கு விளக்­கினேன். தாம் நட­வ­டிக்கை எடுப்போம் என்று தெரி­வித்­தனர். 

அதற்கு பிற்­பாடு இரண்டு மூன்று கூட்­டங்கள் நடை­பெற்­றன. எந்த முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை. இன்று இரண்டு வரு­டங்கள் ஆகி­விட்­டன. நாங்கள் வானத்தை அண்­ணார்ந்து பார்க்கும் நிலைதான் ஏற்­பட்­டுள்­ளது. இப்­ப­டித்தான் எல்லா முயற்­சி­க­ளையும் அர­சாங்கம் ஒரு கண்­து­டைப்­புக்­காக செய்­கின்­றது. உண்­மையும் நீதியும் இல்­லாத இடத்தில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டப்­பே­வ­தில்லை. உண்­மை­யாக மக்­க­ளுக்கு விடு­த­லையை கொடுக்க வேண்டும். நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும். 

இப்­ப­டி­யான ஒரு நிலைமை ஏற்­பட வேண்டும் என்று நாங்கள் முயற்­சிக்­கின்றோம். ஆனால் அர­சாங்­கமும், அர­சுடன் ஈடு­ப­டக்­கூ­டிய அரசியல் வாதிகளும் இணைந்து இப்படிப்பட்ட ஒரு முயற்சியை, நல்ல நோக்கத்தை வேறு திசைக்கு கொண்டு சென்று தமது அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர். 

இது மிகவும் கவலையளிக்கிறது. நிரந்தரமாக தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள். காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைக் குழுவின் முன்னிலையில் எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகவே வந்தேன்- என மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்தார். -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :