காசாவில் மீண்டும் தாக்குதல்கள தொடரலாம்


க்கிரமிப்பு இஸ்ரேல்- பலஸ்தீன காஸாவுக்கு இடையில் ஏற்பட்ட 72 மணிநேர யுத்த நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை காலை 8:00 மணிக்கு முடிவுக்குவரவுள்ள நிலையில் யுத்த நிறுத்தத்தை நீடிப்பதில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

காஸா மக்களை முற்றுகைக்குள் வைத்திருக்கும் நடவடிக்கையை நிறுத்த இஸ்ரேல் இணக்கம் தெரிவிக்க மறுத்துவரும் நிலையில் நிபந்தனையின்றி யுத்த நிறுத்தத்தையே இஸ்ரேல் ஆதரித்துள்ளது. இதை ஹமாஸ் ஏற்றுகொள்ளவில்லை. அதேவேளை ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என ஆக்கிரமிப்பு அரசு கோருகிறது.

காசாவில் 1,800க்கும் அதிகமானோரை பலிகொண்ட இஸ்ரேலின் தாக்கு தல்கள் தற்காலிக யுத்த நிறுத்த உடன்பாட்டின் மூலம் கடந்த செவ்வாய்க் கிழமை காலை 8 மணிக்கு நிறுத்தப்பட்டன. சுமார் ஒரு மாதகாலம் நீடித்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 64 சிப்பாய்கள் உட்பட 67 பேர் கொல்லப்பட்டனர்.என்று ஆக்கிரமிப்பு அரசு கூறுகிறது இந்த நிலையில் மீண்டும் தாக்குதல்கள தொடரலாம் என தெரிவிக்கப் படுகிறது.  l.o
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :