ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைப்பற்று-
காஸா போராட்டம் மற்றும் காஸாவில் இஸ்ரேயல் புரியும் அட்டூழியங்கள் பற்றியும் மக்களுக்கு தெளிவு படுத்தும் மாபெரும் மாநாடொன்று அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நேற்று வியாழக்கிழமை (07.08.2014)பிற்பகல்4.00மணிக்கு நடைபெற்றது.
அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளி வாயல் சம்மேளனம், அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் சமுக அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இம் மாநாடு அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளி வாயல் சம்மேளனத் தலைவர் அல்-ஹாஜ் ஏ.எல்.அப்துல் றஷீட் தலைமையில் நடைபெற்றது.
காஸா போராட்டம் நமக்கு ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இம் மாநாடு குல்லியத்துல் அப்ரார் குர்ஆன் மனனபீட. மாணவன் செல்வன் ஏ.எம்.முஹம்மட் பாஸில் அவர்களின் கிறாஅத்துடன் ஆரம்பமானது.
ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.எம்.ஏ.அப்துல் லெத்தீப் அவர்களின் வரவேற்புரையுடன் கூடிய ஆரம்ப உரையைத் தொடர்ந்து மீள் பார்வை பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.சிறாஜ் மசூர் அவர்கள்;காஸா போராட்டம் நமக்கு ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது என்றும் தற்போது காஸாவில் என்ன நடைபெறுகின்றது என்றும் விரிவாக விளக்கமளித்தார்
.
இந் நிகழ்வில் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளி வாயல் சம்மேளனம், ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் பள்ளிவாயல்கள் முதலியவற்றின் தலைவர்கள், செயலாளர்கள், பிரதிநிதிகள், புத்தி ஜீவிகள், உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், மத்ரசா மாணவர்கள் பொது மக்கள் விஸேடமாக பெண்கள்; என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காஸா மக்களுக்காக பிரார்த்திக்குமாறும், நாளை வெள்ளிக்கிழமையும், நாளை மறுநாள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நோன்பு நோற்குமாறும் ஜும்ஆவின் பின் ஜனாஸா தொழுகையில் ஈடுபடுமாறும் காஸா மக்களுக்காகப் பிரார்த்திக்குமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இன்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் ஜும்ஆ நடைபெற்ற அனைத்துப் பள்ளிவாயல்களிலும் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் காஸாவில் ஸஹிதான மக்களுக்காக ஜனாஸா தொழுகை இடம் பெற்றதோடு, விஷேட துஆப் பிரார்த்தனையும் இடம் பெற்றது.
0 comments :
Post a Comment