கண்டியில் நடைபெற்று வரும் ரந்தோலி பெரஹராவின் இரண்டாவது நாள் பெரஹரா ஊர்வலத்தின் போது யானை ஒன்று திடீர் என குழப்பம் விளைவித்ததில் யானை பாகன் உட்பட 12 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
பெரஹரா ஊர்வலம் வீதி வழியாக சென்று மீண்டும் தலாதா மாளிகைக்கு செல்லும் வழியில் இராஜ வீதி தேவ வீதி சந்தியில் வைத்தே யானை ஒன்று திடீர் என குழப்பம் விளைவித்துள்ளது.
இதனால் யானை பாகன் நடனகாரர்கள் கர்ப்பிணி பெண் ஒருவர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து பேராதனை மிருக வைத்தியசாலை வைத்தியர் அழைக்கப்பட்டு யானைக்கு மருந்தேற்றப்பட்டதையடுத்து நிலைமை சுமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.<வீகே>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment