ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைப்பற்று-
அக்கரைப்பற்று ஹிமாயத்துல் இஸ்லாம் நலன்புரி அமைப்பின் (ஹிவோ) தலைவரும், ஹிவோ கல்லூரியின் தலைவருமான மௌலவி ஐ.எல்.ஐயூப் (யூசுபி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஹிவோ கல்லூரியில் கல்வி பயிலும் யூகேஜி, எல்கேஜி மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டதோடு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஹிவோ கல்லூரி மற்றும ஹிவோ அமைப்பின் பொருலாளர் ஏ.எஸ்.ஹஸ்பி, செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் முதலியோர் கலந்து கொண்டனர்.
நோன்புப் பெருநாள் விடுமுறையின் பின்னர் கல்லூரி ஆரம்பமாகும் முதல்நாள் நோன்புப் பெருநாள் புத்தாடைகள் அணிந்து தங்களது பெற்றோர்களுடனும் இனிப்புப் பண்டங்களுடனும் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கல்லூரியில் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு ஆடிப்பாடி மகிழ்ந்தனர் .தாங்கள் கொண்டுவந்த பெருநாள் இனிப்புப் பண்டங்களை மற்ற மாணவர்கள், ஆசிரியைகள், கல்லூரி நிருவாகிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் கொடுத்து தாங்களும் சாப்பிட்டு மகிழ்ந்ததோடு அன்றைய தினத்தை சந்தோசமாகக் கழித்தனர்.
அக்கரைப்பற்று ஹிமாயத்துல் இஸ்லாம் நலன்புரி அமைப்பின் (ஹிவோ) தலைவரும்; ஹிவோ கல்லூரியின் தலைவருமான மௌலவி ஐ.எல்.ஐயூப் (யூசுபி) அவர்கள் தனது தலைமையுரையின்போது, மாணவர்களின் சந்தோசத்தையும், மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணும் நல்ல பழக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் இந் நிகழ்வு நடாத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment