![]() |
சலீம் றமீஸ்-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்திற்கான 26 வது இளைஞர் விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வின் ஆரம்ப விழா அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாரை மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. சிசிரகுமார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அமைச்சருடன் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சிரியானி விஐயவிக்ரம, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு பாலசுரிய, முன்னால் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு பி.செல்வநாயகம், இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும்,சபை முதல்வருமான யு.எல்.முகம்மட் சபீர், உட்பட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், அம்பாரை மாவட்டத்திலுள்ள இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் வீரர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment