அளுத்கமையில் இராணுவத்தினருடன் விமானப் படையினரும் இணைந்து புனர்நிர்மாணப் பணியில் ஈடுபடல்

ளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற இன வன்முறைச் சம்பவத்தினால் சேதமடைந்த 35 வியாபார நிலையங்களை புனர்நிர்மாணம் செய்யும் பணியில் இராணுவத்தினருடன் இலங்கை விமானப் படையினரும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலகவின் ஆலோசனையின் பேரில் 110 விமானப் படை வீரர்கள் அப்பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கண்டறிவதற்கு விமானப் படைத்தளபதி இன்று அப்பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, அப்பிரதேச வாசிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதுடன், அளுத்கம பெல்லன விகாரை மற்றும் தர்மபால பிரிவெனா நிர்மாணப் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
d.c

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :