பொதுபல சேனாவுக்கு எதிராக பொங்கியெழும் அமைச்சர்களின் அமைப்பு விரைவில் உதயம்

பொதுபல சேனாவுக்கு எதிராக அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் ஒன்று சேர்ந்து புதிய அமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராகி வருவதாக சிங்கள இணையம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுபல சேனாவின் செயலாளரான கலகொடஅத்தே ஞானசாகர தேரர் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது முன்வைத்த குற்றசாட்டுகளின் விளைவாகவே இவ்வாறானதொரு புதிய அமைப்பை அவர்கள் உருவாக்கவுள்ளனர்.

அரசாங்கத்தை தர்மசங்கட நிலைமைக்கு தள்ளிவிடும் வகையில் அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியிலுள்ள சதி முயற்சிகளை முறியடிக்கும் வகையில் தனித்தனியாகச் செயற்படாமல் கூட்டாகச் செயற்பட்டு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்காகவே அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்கள் ஒன்றிணைந்து பொதுபல சேனாவுக்கு எதிராக புதிதாக அமைப்பு ஒன்றினை உருவாக்கத் தயாராகி உள்ளனர் என்றும் அந்த சிங்கள இணையம் தெரிவித்துள்ளது.

தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில் லங்கா சீ நியுஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :