வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கைக்குண்டு மீட்பு

த.நவோஜ்-

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் மீறாவோடை லங்கா ஸ்டோர் வீதியில் இன்று சனிக்கிழமை கைக்குண்டு மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மீறாவோடை லங்கா ஸ்டோர் வீதியில் ஆதம்பாவா நஜீம் என்பவரின் வீட்டில் அவரது மனைவி சனிக்கிழமை காலை 7 மணியளவில் முற்றத்தை துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது ஒரு பொருள் தெரிவதாக அவதானித்து அதனை எடுத்து பார்த்த போது பிளாஸ்டிக் டின்னில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று தெரிவதை அவதானித்ததும் இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருவதாக தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :