எம்.ஜே.எம். முஜாஹித்-
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுமார் ரூபா 400 மில்லியன் செலவில் ஒலுவில் வளாகத்தில் ஆண், பெண், மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய விடுதிகள் எதிர்வரும் 12ம் திகதி செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டவுள்ளதாக பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய விடுதி கட்டிடங்களை வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளார்.
உயர் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ் புதிய விடுதிகளில் ஒரே தடவையில் 1000 மாணவர்கள் தங்க முடியுமென பதிவாளர் எச். அப்துல் சத்தார் மேலும் தெரிவித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment